இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சபாநாயகரின் செயலை கண்டித்து சட்டசபையில் திமுக வெளிநடப்பு

9/2/2025 2:26:00 PM
மெட்ரோ ரயில் அலுவலகத்தை மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் முற்றுகை வரும் 18ம் தேதி சாலை மறியல் நடத்த முடிவு அமெரிக்க ஓபன் டென்னிஸ் செரீனா நடால் முன்னேற்றம்

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று குடிநீர் தட்டுப்பாடு குறித்த கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி பேசினார்.  அப்போது, ‘திண்டுக்கல்லில் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்ற சூழலில் அங்குள்ள  நீர்தேக்கத்தின் அருகே தனியாருக்கு, தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதை எதிர்த்து, மாவட்ட  நிர்வாகத்திடம் கேட்டேன்’ என்றவர், இதைத் தொடர்ந்து அவர் பேசிய சில வார்த்தைகளை சபாநாயகர் தனபாலன், அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார். இதற்கு  திமுக உறுப்பினர்கள், ‘அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க கூடாது’ என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதை சபாநாயகர் ஏற்கவில்லை. இதை  கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது.இதைத் தொடர்ந்து அவைக்கு வெளியே மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியது:

சபாநாயகர் சர்வாதிகாரமாக பேசுவதை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ேளாம். கேள்வி நேரம் முடிந்ததும் நேரம் இல்லா நேரத்தில் ஏற்கனவே மவுலிவாக்கம்  கட்டிட விபத்து குறித்து அறிக்கையை நீதிபதி ரகுபதி, சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில் பல குளறுபடிகள் உள்ளன. இதில் சம்பந்தப்பட்ட  அமைச்சர் மற்றும் அதிகாரிகளை காப்பாற்றும் வகையில் இந்த அறிக்கை உள்ளது. பக்கம் 30, 31, 41 ஆகிய பக்கங்கள் இணைப்பு என கொடுக்கப்பட்டுள்ளது.  அறிக்கையில் இந்த பக்கங்கள் சேர்க்கப்படவில்லை. அதை வழங்க கோரி சபாநாயகருக்கும், சட்டசபை செயலாளருக்கும் கடிதம் எழுதியுள்ளோம். இதுவரை எந்த  பதிலும் இல்லை. இதுகுறித்து பேச முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. புதிய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னை குறித்து 50  தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 30 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். அதுபற்றி பேசவும் சபாநாயகர், அனுமதி  தரவில்லை. மேலும் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ஜெ.அன்பழகன் சில கருத்துக்களை கூறினார். அதையும் குற்றச்சாட்டாக  சொல்லவில்லை. குறைபாடாகத்தான் சொன்னார். அவற்றை எல்லாம் அவை குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்க சொல்லி விட்டார்.நேற்று சுற்றுச்சூழல் அமைச்சர்,  ‘திமுக ஆட்சியில்தான் மாசு கட்டுப்பாட்டு வாரியம் காசு கட்டுப்பாட்டு வாரியமாக மாறிவிட்டது’ என்று கூறினார். அதை மட்டும்அவை குறிப்பில் இருந்து  நீக்கவில்லை. சபாநாயகர் ஏற்று கொள்கிறார். இதை விட அவமானம், கேவலம் எதுவும் இல்லை. ஆளுங்கட்சியினர், பஜனை பாடவும், துதி பாடவும் மட்டுமே  சபாநாயகர் செயல்படுகிறார். இதை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • தமிழகத்தில் முதன்முறையாக திசையன்விளை பேரூராட்சியில் 5 கி.மீ சுற்றளவில் 72 கண்காணிப்பு கேமராக்கள்



  • சேஷசமுத்திரத்தில் தலித்துகள் மீதான தாக்குதலை கண்டித்து காங்கிரஸ் சார்பில் வரும் 9ம் தேதி ஆர்ப்பாட்டம்: இளங்கோவன் அறிவிப்பு



  • ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணி : வைகோ அறிக்கை



  • அதிமுக ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது : விஜயகாந்த் பேச்சு



  • வடசென்னை மேற்கு மாவட்ட தமாகா இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம்: மாவட்ட தலைவர் ஆனந்த் அறிவிப்பு



  • சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் எஸ்.யோகரத்தினம் மறைவு : தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி



  • மெட்ரோ ரயில் அலுவலகத்தை மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் முற்றுகை வரும் 18ம் தேதி சாலை மறியல் நடத்த முடிவு



  • வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே உஷார் : தமிழகத்தில் வடமாநில கொள்ளை கும்பல் : வாட்ஸ்அப்பில் பரவும் பரபரப்பு தகவல்



  • வாக்காளர் பட்டியல் திருத்தம் கட்சியினருக்கு ஜெ புது உத்தரவு



  • விஜயதாரணியிடம் இளங்கோவன் நலம் விசாரித்தார்



Facebook

Twitter

சிருஷ்டி டாங்கே முத்தம் ஹீரோ நடுக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]