அடகு நகையை மீண்டும் அடமானம் வைத்து மோசடி: வங்கி மேலாளர் ஊழியர்களுக்கு சிறை
9/2/2025 2:13:50 PM
மேட்டுப்பாளையம்: கேரள மாநிலம் கொச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அக்ரோ இண்டர்ஸ் தனியார் வங்கியின் கிளை மேட்டுப்பாளையத்தில் உள்ளது. இங்கு மேலாளராக இருப்பவர் தமிழ்ச்செல்வன். இவர் வங்கியில் பொதுமக்களால் அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகளுக்கு பதிலாக, போலி நகைகளை வைத்து விட்டு, அசல் நகைகளை மீண்டும் தமது நிறுவனத்திலேயே வேரொருவர் பெயரில் அடமானம் வைத்து பணத்தை கையாடல் செய்துள்ளார். ரூ.12.25 லட்சம் வரை இவ்வாறு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.இதுபற்றி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மேலாளர் தமிழ்செல்வன், அவருக்கு உதவியாக இருந்த ஊழியர்கள் சிவகுமார், வீரேஷ் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர், அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்து மேட்டுப்பாளையம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.