ஆக்ரோஷத்தை இசாந்த் குறைக்க வேண்டும் - அகர்கர்
9/2/2025 2:11:28 PM
மும்பை: இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் போது அந்த அணி வீரர்கள் சண்டிமால், திருமன்னே. தமிகா பிரசாத் ஆகியோருடன் மோதலில் ஈடுபட்டதால், இந்திய வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. இதேபோல் சண்டிமால், ஒரு ஒருநாள் போட்டியில் ஆடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித்அகர்க்கர், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆக்ரோஷம் கண்டிப்பாக தேவை. அது இருந்தால் தான் வேகத்தில் பந்து வீச முடியும். அதே நேரத்தில் அவை எல்லை மீறி சென்றுவிடக்கூடாது. இலங்கை வீரர்களுடன் மோதலில் அவர் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். வழக்கத்திற்கு மாறாக அவர் நடந்து கொண்டார். அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது, என்று கூறி உள்ளார்.