என் தங்கை நடிக்கிறாரா? அஞ்சலி ஷாக்
9/2/2025 2:11:07 PM
‘அங்காடி தெரு’ அஞ்சலி தான் உண்டு தன்வேலை உண்டு என்றிருந்தார். தனது சித்தியுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு பரபரப்பாகிவிட்டார். தமிழுக்கு ஒரு வருடம் முழுக்கு போட்டுவிட்டு தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்றவர் சமீபத்தில் ‘சகலகலா வல்லவன்’ படம் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க வந்தார். ‘தரமணி’, ‘இறவி’ படங்களில் தற்போது நடித்து வருகிறார். தவிர ‘டிக்டேட்டர்’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் அஞ்சலியின் தங்கை ஆராத்யா தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் என்று தகவல் வெளியானது. அதைக் கேட்டு ஷாக் ஆனார் அஞ்சலி. இதுபற்றி அவர் தரப்பில் கூறும்போது,:அஞ்சலியின் தங்கை படத்தில் அறிமுகமாவதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. அது தவறானது. அஞ்சலிக்கு ஒரு சகோதரிதான் இருக்கிறார். அவர் சினிமாவில் கிடையாது. மற்றபடி வேறு சகோதரிகள் யாரும் அஞ்சலிக்கு இல்லை. அதுபோல் யாரும் நடிகையாக அறிமுகமும் ஆகவில்லை’ என்றனர்.