இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ஊரப்பாக்கத்தில் பள்ளி மாணவி கடத்தல்? போலீஸ் விசாரணை

9/2/2025 1:53:50 PM
அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் ஒரு ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 37 கோடி

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கத்தில் 10ம் வகுப்பு மாணவி மாயமானர். இதில் அவரது புத்தக பை கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் கிடந்தது. இதனால் அவர் கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அடுத்த ஊரப்பாக்கம் ராஜிவ் காந்திநகர் கங்கா தெருவை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகள் லட்சுமிபிரியா(17). இவர் ஊரப்பாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி அவரது உறவினர், நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவரது பெற்றோர் கூடுவாஞ்சேரி போலீசில் நேற்று புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் தங்கும் இடத்தில் லட்சுமிபிரியாவின் புத்தக பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரனை நடத்தி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பேருந்து நிலையத்தை சுற்றி காலை மற்றும் மாலை நேரங்களில் மர்ம கும்பல் சுற்றி திரிகின்றனர். இங்கு பஸ் ஏற வரும் மாணவிகளை கிண்டல் செய்கின்றனர். மேலும் சிலர் கார், வேன், பைக், ஆட்டோ ஆகியவற்றை எடுத்து வந்து மணி கணக்கில் பார்க்கிங் செய்துவிட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். போலீசார் வருவதையறிந்தால் ஓட்டம் பிடிக்கின்றனர். எனவே இப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என்றனர்.

மேலும் சில
  • சிவகங்கையில் பயங்கரம் : கோர்ட்டில் வாலிபர் கொலை



  • டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் சரமாரி அடித்து வக்கீல் படுகொலை : திண்டுக்கல் அருகே பரபரப்பு



  • ஓடும் ரயிலில் பெண்ணுக்கு முத்தம் : இன்ஜினியர் கைது



  • கிரிக்கெட் சூதாட்டத்தில் மீதி பணம் தராததால் பி.டெக் மாணவன் கடத்தல் : 2 மாணவர்கள் கைது



  • வங்கி ஊழியர் வீட்டில் 12 பவுன் கொள்ளை



  • பெரம்பூரில் துணிகரம்: நகை கடை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளை



  • செம்மரக்கட்டை கடத்திய 4 பேர் கைது



  • ஊர் கமிட்டி தேர்தலில் மோதல் : மீனவர் அடித்துக் கொலை : தூத்துக்குடி அருகே பயங்கரம்



  • தமிழகம் புதுச்சேரியில் மதுவிலக்கு : எஸ்.எப்.ஐ. மாநாட்டில் தீர்மானம்



  • லாட்டரி சீட்டு விற்பனை செய்த அதிமுக செயலாளர் கைது



Facebook

Twitter

To talk to the female voice actor Oscar Sound Training
பெண் குரலில் பேச ஆஸ்கர் விருது ஒலிப்பதிவாளரிடம் நடிகர் பயிற்சி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]