இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சென்னை வாலிபர் லாக்அப்பில் மர்ம சாவு : 2 எஸ்ஐ, போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்

9/2/2025 1:52:53 PM
அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் ஒரு ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 37 கோடி


வில்லியனூர்: விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வாலிபர், லாக்கப்பில் உயிரிழந்தார். இதுசம்பந்தமாக 2 எஸ்ஐக்கள், போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.புதுவை வில்லியனூர் அடுத்த டி.என்.பாளையம் நடராஜன் நகரில் வசித்தவர்  முத்துக்குமரன் (31). இவர் சென்னையை சேர்ந்தவர். வெட்டியான். இவரது மனைவி சுமதி. இறந்து விட்டார். 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.முத்துக்குமரனை கடந்த 4 நாட்களுக்கு வில்லியனூர் போலீசார், திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலை இவர், காவல் நிலைய லாக்அப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி சடலத்தை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார், மாவட்ட நீதிபதிக்கு தகவல் கொடுத்தனர். சீனியர் எஸ்பி சந்திரன், எஸ்பி பைரவசாமி மற்றும் அதிகாரிகள் வில்லியனூர் காவல் நிலையத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.இதற்கிடையில் முத்துக்குமரன் இறந்தது பற்றி அறிந்ததும் உறவினர்கள் கதிர்காமம் மருத்துவமனையில் திரண்டனர். திடீரென அவர்கள் வில்லியனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  போலீசார் அடித்ததில்தான் முத்துக்குமரன் இறந்துவிட்டார் என்று கோஷங்கள் போட்டனர்.

இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் முத்துக்குமரன் சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.இந்நிலையில் முத்துக்குமரன் மரணத்தின் போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த எஸ்ஐக்கள் சஜீத், கணேசன், போலீஸ்காரர்கள் பத்மநாபன், அனந்தகிருஷ்ணன், செல்வம் ஆகிய 5 பேரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி கண்ணன் ஜெகதீசன் உத்தரவிட்டு உள்ளார். சர்க்கிள் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.இதனிடையே முத்துக்குமரன் உறவினர்கள், இன்று காலையும் காவல் நிலையத்தை  முற்றுகையிட்டனர். முத்துக்குமரன் மரணத்தின்போது பணியில் இருந்த காவலர்கள் மீது நடவடிக்ைக எடுக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் வில்லியனூர் பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.

மேலும் சில
  • சிவகங்கையில் பயங்கரம் : கோர்ட்டில் வாலிபர் கொலை



  • டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் சரமாரி அடித்து வக்கீல் படுகொலை : திண்டுக்கல் அருகே பரபரப்பு



  • ஓடும் ரயிலில் பெண்ணுக்கு முத்தம் : இன்ஜினியர் கைது



  • கிரிக்கெட் சூதாட்டத்தில் மீதி பணம் தராததால் பி.டெக் மாணவன் கடத்தல் : 2 மாணவர்கள் கைது



  • வங்கி ஊழியர் வீட்டில் 12 பவுன் கொள்ளை



  • பெரம்பூரில் துணிகரம்: நகை கடை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளை



  • செம்மரக்கட்டை கடத்திய 4 பேர் கைது



  • ஊர் கமிட்டி தேர்தலில் மோதல் : மீனவர் அடித்துக் கொலை : தூத்துக்குடி அருகே பயங்கரம்



  • தமிழகம் புதுச்சேரியில் மதுவிலக்கு : எஸ்.எப்.ஐ. மாநாட்டில் தீர்மானம்



  • லாட்டரி சீட்டு விற்பனை செய்த அதிமுக செயலாளர் கைது



Facebook

Twitter

To talk to the female voice actor Oscar Sound Training
பெண் குரலில் பேச ஆஸ்கர் விருது ஒலிப்பதிவாளரிடம் நடிகர் பயிற்சி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]