இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வண்டலூரில் நவீன பேருந்து நிலையம்: இடம் கிடைக்காமல் வருவாய்த்துறை திணறல்

8/31/2015 2:26:15 PM
மரண தண்டனையை ஒழிக்க மத்திய அரசு முன் வர வேண்டும் : கருணாநிதி வலியுறுத்தல் சக மாணவிகள் ராகிங் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை: காவல் நிலையம் அருகே மறியல் கொடுங்கையூரில் பரபரப்பு

கூடுவாஞ்சேரி: வண்டலூரை அடுத்த வாலாஜாபாத் சாலையோரம் உள்ள விளைநிலங்களை கையகப்படுத்தி, ‘65.5 ஏக்கர் நிலப்பரப்பில் ₹376 கோடி மதிப்பில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும்’ என்று கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.இந்நிலையில், வண்டலூரில் பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்ய முடியாமல் தமிழக வருவாய் துறையினர் திணறி வருகின்றனர்.வண்டலூர்-வாலாஜாபாத் சாலையோரத்தில் விளைநிலங்களை கையகப்படுத்தி, நவீன பஸ் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அதற்கு பதில், ஊரப்பாக்கத்தில் ஜிஎஸ்டி சாலையோரம் காலியாக உள்ள 110 ஏக்கரில் நவீன பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும் பொதுமக்களும் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம்.இதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் 110-வது விதியின்கீழ் ‘வண்டலூர்-வாலாஜாபாத் நெடுஞ்சாலை, வெளிவட்ட சாலை, ரயில் நிலையம் அருகே வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமையும்’ என்று தமிழக முதல்வர் அறிவித்தார். இவை எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.தலைமுறை தலைமுறையாக உழுது பயிரிட்டு விவசாயம் செய்து வரும் சிறு விவசாயிகளின் நஞ்சை நிலத்தை வருவாய் துறை அதிகாரிகள் தமிழக முதல்வருக்கு அடையாளம் காட்டியுள்ளனர்.

மேலும், வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தபோது, ‘இனி வருங்காலங்களில் வண்டலூர் கிராமத்தில் கைப்பிடி மண்கூட எடுக்கக்கூடாது’ என்று உறுதியளித்திருந்தார்.வண்டலூரில் ஏற்கனவே உயிரியல் பூங்கா அமைப்பதற்காக, ஓட்டேரி ஏரி மற்றும் அதைச் சார்ந்த விவசாய நிலங்களை தமிழக அரசு கைப்பற்றியது. ஜிஎஸ்டி நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் வண்டலூர்-வாலாஜாபாத் சாலை விரிவாக்கத்துக்கும் விவசாயிகளின் வீடுகளையும் வீட்டுமனைகளையும் இழந்துள்ளனர்.தற்போது வண்டலூர் பெரிய ஏரியின் நடுவே, வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை அமைத்து வருவதால் அங்கு குடியிருந்த ஏழை விவசாயிகளின் குடிசை வீடுகளும் அகற்றப்பட்டன. இதனால் வீடு இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.வண்டலூரில் பாரம்பரியமாக உழுது பயிரிட்டு வந்த விவசாயிகளின் நிலங்களை தொடர்ந்து கைப்பற்றினால், அவர்களது வாழ்வாதாரமே முற்றிலும் அழிந்துவிடும்.வண்டலூருக்கு அருகே ஊரப்பாக்கத்தில் தனிநபர் வசம் இருக்கும் 110 ஏக்கர் கொண்ட அரசு புறம்போக்கு நிலம் வருவாய்த்துறை அதிகாரிகளின் பரீசீலனையில் இருந்து தப்பி போனது எப்படி?

‘நஞ்சை நிலத்தை ரியல் எஸ்டேட் ஆக்கக்கூடாது’ என்று சட்டம் இருக்கும்போது, நஞ்சை நிலங்களை பேருந்து நிலையத்துக்காக அரசு தேர்வு செய்தது எவ்வகையில் நியாயம்?’ என்று அப்பகுதி விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.எனவே, ஊரப்பாக்கத்தில் தனிநபரிடம் இருக்கும் 110 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில், நவீன பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று வண்டலூர் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.இதனால் வண்டலூரிலும் ஊரப்பாக்கத்திலும் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த முடியாமல் வருவாய்த்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

மேலும் சில
  • தங்கம் சவரனுக்கு ரூ. 160 உயர்வு



  • போலீசார் மீது புகார் போலீஸ் கமிஷனர் ஆபீசில் பெண் தீ குளிக்க முயற்சி



  • அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாய சங்க நிர்வாகிக்கு தொடர்ந்து வீட்டு காவல் வேதனை கூட்டம் நடத்த விவசாயிகள் முடிவு



  • சென்னை மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்: இ.சி.சேகர் தலைமையில் நாளை நடக்கிறது



  • நாளை ஸ்டிரைக்கை தவிர்க்க தொழிலாளர் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்



  • அதிமுகவினர் ரூ. 100 கோடி அரசு நிலம் ஆக்கிரமிப்பு : மா. சுப்பிரமணியன் குற்றச்சாட்டு



  • தாமிரபரணி, காவிரி, பவானி ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பதில்லையா? அமைச்சருக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு



  • மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்



  • சிவாஜி சிலை அகற்ற தமிழக அரசு முடிவு: ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தகவல்



  • அமைச்சர் விமர்சித்ததால் அமளி சட்டசபையில் திமுக வெளிநடப்பு



Facebook

Twitter

Aishwarya Rai by learning Arabic
அரபி கற்கிறார் ஐஸ்வர்யா ராய்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]