இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 2 கட்டமாக கும்பாபிஷேகம்

8/24/2015 2:37:07 PM
அரசு வேலை வாங்கி தருவதாக 28 கோடி ரூபாய் மோசடி: எடப்பாடி பிஏ மீது வழக்கு 5 மாநில தேர்தல் குறித்து சோனியா ஆலோசனை: மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்பு

திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானது. கோயிலுக்கு 2001ம் ஆண்டு மார்ச் 15ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், ரூ.10.45 கோடி மதிப்பீட்டில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையடுத்து, திருப்பணிகள் கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி முதல் துவங்கியது.  திருப்பணியின் முதற்கட்டமாக 7 கோபுரங்களில் திருப்பணிகள் கடந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி தொடங்கின. மீதமுள்ள 14 கோபுரங்கள் ஐூலை 9ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. 52 உபசன்னதிகள் பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டது. சந்திரபுஷ்கரணி குளம் தூர்வாரப்பட்டது. மேலும், கோயிலில் அனைத்து புனரமைக்கும் பணிகளும் பழமை மாறாமல் நடந்து வருகிறது.

90 சதவீதத்திற்கு பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 43 உபசன்னதிகளுக்கும், 11 கோபுரங்களுக்கும் வரும் 9ம் தேதி காலை 5.40 மணி முதல் 6.40 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி செப்டம்பர் 7ம் தேதி மாலையில் முதற்கால யாக சாலை பூஜைகளும், 8ம் தேதி காவி ரியில் புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 2ம் கால மற்றும் 3ம் கால யாக சாலை பூஜைகளும் நடக்கிறது. செப்டம்பர் 9ம் தேதி காலை 6.30 மணிக்கு 11 கோபுரங்கள், 43 உபசன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 2ம் கட்டமாக ராஜகோபுரம் உள்ளிட்ட மீதமுள்ள 10 கோபுரங்களுக்கும், பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளுக்கும், உபசன்னதிகளுக்கும் அக்டோபர் மாதம் கும்பாபிஷேகம் நடைபெறலாம் என தொிய வருகிறது.

மேலும் சில
  • அரசு வேலை வாங்கி தருவதாக 28 கோடி ரூபாய் மோசடி: எடப்பாடி பிஏ மீது வழக்கு



  • வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை.!



  • தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: தொடர்ச்சியாக கனமழை பெய்யும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்



  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றவாளிகளை கண்காணிக்க சென்னையில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு



  • விடிய விடிய கனமழை கொடைக்கானல்-பெரியகுளம் மலைச்சாலையில் திடீர் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு



  • இன்ஜி. துணை கலந்தாய்வு நிறைவு : மொத்தம் 95,069 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன



  • நடப்பு மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 21வது நாளாக அதிகரிப்பு: முறையே 30, 33 காசு உயர்வு



  • தமிழகம் முழுவதும் 6வது கட்டமாக 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு



  • தீபாவளி நெருங்கி வரும் வேளையில் தங்கம் விலை அதிரடியாக இன்று ரூ.224 அதிகரிப்பு: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி



  • 12 மணி நேர ரெய்டில் 21 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி சிக்கியது: எடப்பாடி நண்பர் சொத்து குவித்தது எப்படி? அதிமுகவின் அதிகார மையமானது குறித்து பரபரப்பு தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]