இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பழனி அருகே இரவில் காங். அலுவலகத்துக்கு தீ வைப்பு : அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது

8/22/2015 11:51:39 AM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

பழநி: பழநி அருகே காங்கிரஸ் தொழிற்சங்க அலுவலகத்திற்கு தீ வைத்த அதிமுக பிரமுகர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறிய கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இளங்கோவனை கண்டித்து கடந்த 5 நாட்களாக உருவபொம்மை எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.பழநி அருகே சின்னகலையம்புத்தூரில் காங்கிரஸ் தொழிற்சங்க அலுவலகம் உள்ளது. நேற்று இரவு 9 மணியளவில் பைக்கில் வந்த 2 பேர், பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து திடீரென காங்கிரஸ் அலுவலகத்தின் கதவு, ஜன்னல் உள்ளிட்ட பகுதிகளில் ஊற்றி தீவைத்தனர். இதை கவனித்த அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். அதற்குள் இருவரும் பைக்கில் தப்பியோடி விட்டனர். தகவலறிந்து காங்கிரஸ் கட்சியினர் அப்பகுதியில் திரண்டனர். பொதுமக்கள், கட்சியினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

இதுதொடர்பாக பழநி தாலுகா போலீசில் காங். மேற்கு மாவட்ட துணைத்தலைவர் தாமோதரன் புகார் தெரிவித்தார். இன்று காலை கட்சி அலுவலகம் முன்பு திரண்ட காங்கிரஸ் கட்சியினர் தீ வைத்தவர்களை கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பதற்றம் நிலவுவதால் கட்சி அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.போலீசாரின் விசாரணையில், தீ வைப்பு சம்பவத்தில் தொடர்புடைய சின்ன கலையம்புத்தூரை சேர்ந்த அதிமுக ஒன்றிய மாணவரணி செயலாளர் சதீஷ், அதிமுக பிரமுகர் ரமேஷ், ஒன்றிய மாணவரணி நிர்வாகி அழகேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் இருவரை தேடி வருகின்றனர்.இச்சம்பவத்தால் பழநி, நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள காங்கிரஸ் அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் சில
  • அம்பத்தூர் அருகே பூட்டிய வீட்டில் காஸ் சிலிண்டர்கள் கொள்ளை



  • ஆவடி பகுதிகளில் 2,690 போதை பாக்கெட்டுகள் பறிமுதல்: 9 வியாபாரிகள் கைது



  • கள்ளச்சாராயம் பெண்கள் உள்பட 28 பேர் கைது



  • கிருஷ்ணகிரி வங்கி கொள்ளையில் பிடிபட்ட கொள்ளையர்களிடம் சொத்து ஆவணம் பறிமுதல்: 4 பேரும் சேலம் சிறைக்கு மாற்றம்



  • கஞ்சா வாங்கி வராததால் ஆத்திரம் மயிலாப்பூரில் சிறுவன் அடித்து கொலை : சிறுவர்கள் 2 பேர் சிக்கினர்



  • சிறுமி சில்மிஷம் : வாலிபர் கைது



  • பல்லாவரத்தில் பூட்டிய வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை மருந்து பிரதிநிதி கைது



  • மின்சார கொள்முதலில் ரூ. 1 லட்சம் கோடி முறைகேடு நடந்ததாக வழக்கு: ஐகோர்ட் முடித்து வைத்தது



  • கண்ணாடி, பிளக்ஸ் போர்டுகளை உடைத்தனர் திருச்சி காங். ஆபீஸ் மீது அதிமுகவினர் தாக்குதல்: எம்.பி உள்பட 150 பேர் கைது



  • ரூ. 3 லட்சம் முறைகேடு மாவட்ட மைய நூலக ஊழியர் சஸ்பெண்ட்



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]