இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மதுவிலக்கு போராட்டத்தை திசை திருப்பவே இளங்கோவன் கொடும்பாவி எரிக்கப்படுகிறது: விஜயகாந்த் பேச்சு

8/22/2015 11:49:12 AM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

ஊத்துக்கோட்டை: பூரண மதுவிலக்கு போராட்டத்தை திசை திருப்ப ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் கொடும்பாவி எரிக்கப்பட்டு வருகிறது என கும்மிடிப்பூண்டியில்  மீனவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். திருவள்ளூர்  மாவட்ட தேமுதிக சார்பில், 100 மீனவ குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சம் செலவில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் கும்மிடிப்பூண்டியில் நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் சி.எச்.சேகர் எம்எல்ஏ தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் ஆர்.பி. சரவணன் வரவேற்றார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:-கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள கண்ணன்கோட்டை பகுதியில் ரூ.330  கோடி செலவில் புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்காக பயிர்களை அழித்து விவசாய நிலங்களை கையகப்படுத்தியது மிகப்பெரிய தவறு. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.

 இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோல் அம்மா குடிநீர் திட்டத்துக்காக இப்பகுதியில் தண்ணீர் உறிஞ்சப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நீலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம், அதிமுக அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு.  அதிமுகவினர் எந்த திட்டம் தொடங்கினாலும் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும்  பூரண மதுவிலக்கு பிரச்னையை திசை திருப்பவே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் கொடும்பாவி எரிப்பு போராட்டத்தை அதிமுகவினர் நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

 முன்னதாக, பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, ‘’கண்ணன்கோட்டையில் விவசாய நிலத்தை அழித்தது தவறான செயல். கும்மிடிப்பூண்டியில் அம்மா குடிநீருக்காக தண்ணீர் உறிஞ்சப்பட்டு  தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. அந்தந்த மாவட்டத்திலேயே தண்ணீர் எடுத்து விற்பனை செய்யலாமே?  கும்மிடிப்பூண்டியில் பஸ் டெப்போ அமைப்பதாக சட்டமன்றத்தில் அதிமுக அரசு உறுதியளித்தது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்படி அமைத்தால் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக உள்ள சி.எச்.சேகருக்கு பெயரும்,  புகழும் கிடைத்துவிடும் என்பதற்காக திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர்’’ என்றார்.ஏ.வி.ஆறுமுகம், டேவிட்சன், நம்பாக்கம் இ.முனிவேல், எஸ்.ஞானமுத்து, ெப.முருகேசன், ஞானமூர்த்தி, சசிபூஷன், பி.எம்.சாமி, என்.மணிகண்டன், சாந்தி ஜான்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கும்மிடிப்பூண்டி பேரூர் கழக செயலாளர் கே.ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.

மேலும் சில
  • டேங்கர் லாரிகளில் கொண்டு செல்லப்படும் தமிழக பாலை சோதனை செய்யும் கேரள அதிகாரிகள்



  • நீலகிரியில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவல்: போலீசார் தீவிர தேடுதல்



  • கோடநாடு எஸ்டேட்டில் பள்ளி மூடல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்



  • இளங்கோவன் நிதானத்துடன் பேசுகிறாரா? இல.கணேசன் சந்தேகம்



  • மதுவை எதிர்த்து கரசங்காலில் இன்று திமுக மகளிர் மாநாடு



  • மதுவை எதிர்க்கும் மகளிர் மாநாடுக்கு பிரம்மாண்ட ஏற்பாடு : தா.மோ. அன்பரசன் அறிக்கை



  • இன்று மாலை நடைபெறும் மதுவிலக்குக்கு எதிரான திமுக மகளிரணி மாநாடு : ஆதனூர் ஊராட்சி திமுக சிறப்பு ஏற்பாடு



  • குண்டும், குழியுமாகி பழுதான வாலாஜாபாத் சாலை வாகன ஓட்டிகள் அவதி



  • இளங்கோவனை கண்டித்து மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம்



  • மது ஒழிப்பு மகளிர் அணி மாநாட்டில் ஆப்பூர் ஊராட்சியில் இருந்து 2000 பேர் பங்கேற்பு



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]