இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

எனது பணிகளில் முக்கியமானது வெளிநாடுகளில் அதிக வெற்றிகளை குவிக்க வேண்டும் : ஆஸி., புதிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டி

8/17/2015 2:31:01 PM
காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்காலில் நாளை நடக்கிறது மதுவை எதிர்க்கும் மகளிர் மாநாடு கருணாநிதி, ஸ்டாலின் பங்கேற்பு அன்னா ஹசாரேவுக்கு கொலை மிரட்டல் : 10 நாட்களுக்குள் 2வது முறையாக


லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரை, 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா இழந்துள்ளது. தொடர் தோல்விகள், பார்ம் அவுட் காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். வரும் 20ம் தேதி துவங்கும் 5வது மற்றும் கடைசி டெஸ்டுடன் கிளார்க் ஓய்வு பெறுகிறார். இதனால் ஸ்டீவன் ஸ்மித் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வெளிநாடுகளில் அதிக வெற்றிகளை குவிக்க விரும்புவதாக ஸ்டீவன் ஸ்மித் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியது: ஆஷஸ் தொடரின் தோல்வியில் இருந்து ஆஸ்திரேலிய அணி முதலில் மீண்டு வர வேண்டும் என நினைக்கிறேன். ஆஸ்திரேலியா தவிர்த்து வெளிநாடுகளில் அதிக வெற்றிகளை பெற வேண்டும். எனது பணிகளில் இதையே மிக முக்கியமானதாக கருதுகிறேன்.லண்டன் ஓவல் மைதானத்தில், 20ம் தேதி துவங்கும் ஆஷஸ் கடைசி டெஸ்டுடன், கிளார்க் ஓய்வு பெறுகிறார். அதன்பின் பங்களாதேசில் சென்று விளையாட இருக்கிறோம். உலகம் முழுவதும் பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப எங்களை மாற்றி கொண்டு விளையாட முடியும் என்பதை நிரூபிக்க எங்களுக்கு கிடைத்த வாய்ப்பு இது.  

ஆனால் எங்களின் தற்போதைய கவனம், ஆஷஸ் கடைசி டெஸ்டில்தான் உள்ளது. சில காரணங்களால் இந்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியவத்துவம் வாய்ந்தது. ஏனெனில் கிளார்க்கின் கடைசி போட்டி இது. அவரை வெற்றியுடன் வழியனுப்ப வேண்டும். அதை நாங்கள் செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு அவர் மிகச் சிறந்த வீரர். சிறந்த கேப்டனும் கூட. ஆஸ்திரேலிய அணிக்கு தலைமையேற்க கிடைத்த வாய்ப்பால் மகிழ்ச்சியடைகிறேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஒரு வெற்றிகரமான, புதிய சகாப்தமாக இது இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. துணை கேப்டன் டேவிட் வார்னரின் ஒத்துழைப்பு வேண்டும். அவருடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். எங்களை ஒருவருக்கொருவர் நீண்ட நாட்களாக தெரியும். எங்கள் கூட்டணி அற்புதமானதாக இருக்கும்.

மேலும் சில
  • ஆஷஸ் கடைசி டெஸ்ட் ஆஸி. சிறப்பான தொடக்கம்



  • வீணான சிறந்த பகுதியை மீண்டும் பெற முடியாது : சல்மான் பட் ஆதங்கம்



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்



  • சானியா மிர்சா என்னுடைய அதிர்ஷ்டம் சோயீப் மாலிக் பேட்டி



  • நியூசி.யுடன் முதல் ஒன் டே; தென் ஆப்பிரிக்கா சூப்பர் வெற்றி



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் மூன்றாம் சுற்றில் ஜோகோவிச், செரீனா



  • இலங்கையுடன் 2வது டெஸ்ட் நாளை தொடக்கம் : வெற்றி நெருக்கடியில் களம் இறங்கும் இந்தியா



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் மூன்றாம் சுற்றில் ரோஜர் பெடரர்



  • ரோகித் சர்மா மோசமான ஆட்டம் கோஹ்லியின் திட்டம் பயனளிக்குமா? கோஹ்லியின் திட்டம் பயனளிக்குமா?



  • உலக நம்பர் 1 இடத்தை மீண்டும் பிடிக்கிறார் சாய்னா



Facebook

Twitter

சமந்தாவை கண்காணிக்கும் இயக்குனர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]