அப்துல் கலாம் அடக்கத்திற்கு குழிதோண்டியவர் பற்றி சுவராஸ்யம்
7/31/2015 3:30:07 PM
சென்னை: அப்துல்கலாம் உடல் அடக்கத்திற்கான குழிதோண்டியவர் குறித்த சுவராஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.அப்துல் கலாம் உடலை அடக்கம் செய்வதற்கான குழியை தோண்டியவர் கணேசன்(54). அங்குள்ள ஜும்மா மசூதியில் தூய்மை செய்யும் பணி செய்கிறார். கூடவே இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணியும் அவருடையதுதான். அப்துல்லாம் 2 மாதங்களுக்கு முன் மசூதிக்கு வந்தபோதுதான் முதல் முறையாக பாரத்திருக்கிறார். அதற்கு முன்பு அவரரைப்பற்றி கேள்விப்பட்டதோடு சரி. அதுவும் பெரிய விஞ்ஞானி, ஜனாதிபதியாக இருந்தவர், மக்களுக்கு மிகவும் பிடித்தவர் என்று கேள்விப்பட்டேன். அவர் நி்றைய பணம் சம்பாதிக்கவில்லை போல், அவர்கள் குடும்பத்தினர் சின்ன வீட்டில்தான் வசிக்கின்றனர்’ என்று மனதில் பட்டதை பட்டென்று சொல்கிறார். கணேசன் நேற்றுக் காலைதான் கலாம் அடக்கம் செய்வதற்கான குழியை தோண்டியுள்ளார். மணல் பகுதி என்பதால் குழி தோண்டுவது மிகவும் சிரமமாம். அதனால் பனைமரக் கழிகளை தடுப்புகளாக பயன்படுத்தி குழி எடுப்பாராம். இப்போது மரப்பலகைகளை பயன்படுத்தியுள்ளார். குழியை 3 அடி அகலம் 7 அடி நீளத்தில் தோண்டியுள்ளார். தொழிலதிபர், மீனவர், ஏழை, பணக்காரன் என எல்லோருக்கும் குழி தோண்டியிருக்கிறேன். இந்த மாதத்தில் இது 4வது குழி என்கிறார் கணேசன்.
ஒரு குழி தோண்ட 1300 ரூபாய் வரை தருவார்கள். மற்ற நாட்களில் மசூதியை தூய்மை செய்யும் பணியை செய்வேன். அதற்கு ஒரு நாளைக்கு 50 ரூபாய் கூலி. வேறு வேலை ஏதாவது கிடைத்தாலும் செய்வாராம். பெரும்பாலும் மசூதி வேலைதான். கணேசன் கதையும் சோகம், கஷ்டம், அவ்வப்போது மகிழ்ச்சி என திருப்பங்களை கொண்டதுதான். கணேசன் பிறப்பதற்கு முன்பே அவரது தந்தை இறந்து விட்டாராம். பிறந்ததும் தாய் இறந்து விட்டாராம். உறவினர் வீட்டில் 10 வயது வரை வளர்ந்துள்ளார்.அதன் பிறகு கிடைத்த வேலையை செய்து பிழைத்தவருக்கு 16 வயதில் காதல் கை கொடுத்துள்ளது. அந்த காதலால் 14 வயது சோனாட்சியை திருமணம் செய்துள்ளார். காதல் என்றாலும ஒரே சாதி என்பதால் பிரச்னை ஏற்படவில்லையாம். இப்போது அவர்களுக்கு 2 பையன், ஒரு பெண். இந்நிலையில் சோனாட்சியின் தோழி லட்சுமி என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு மணந்துள்ளார்.விதவையான லட்சுமியை மணந்ததில் சோனாட்சிக்கு எந்த வருத்தமும் இல்லையாம். இன்றும் இரண்டு பேரும் தோழிகளாக இருக்கின்றனர். தனி தனி வீடுகளில் வசித்தாலும் வாரத்திற்கு ஒரு முறையாவது இரண்டு பேரும் சந்தித்து விடுவார்கள். லட்சுமி மூலம் 8 வயது பெண் குழந்தை உள்ளது.