இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மேட்டூர் அணை நாளை திறப்பு : இல்லை 56வது ஆண்டாக ஏமாற்றம்

6/11/2025 3:25:10 PM
இந்திய தலைவர்கள் பொறுப்பில்லாமல் பேசுகிறார்களாம் : பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப் புலம்பல் பீகார் முதல்வராக விருப்பம் இல்லை : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நாளை தண்ணீர் திறந்து விடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 56வது ஆண்டாக குறிப்பிட்ட  தேதியில் தண்ணீர் திறப்பது தள்ளி போவதால் டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 82 ஆண்டுகள் ஆகிறது.  அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில்  16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.அணையின் நீர் மட்டம் 90 அடியாக இருந்தால், பருவ மழையை எதிர் நோக்கி, குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ல்  அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் மேட்டூர் அணையின் வரலாற்றில், குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ல், 15 ஆண்டுகள் மட்டுமே தண்ணீர்  திறக்கப்பட்டுள்ளது. மேலும் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்த காரணத்தால், 11 ஆண்டுகள் குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

மற்ற ஆண்டுகளில் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால், தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டும் ஆகஸ்ட் 10ம் தேதிதான் தண்ணீர்  திறக்கப்பட்டது.இந்நிலையில் ஜூன் 12ம் தேதியான நாளை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். ஆனால் அணையின் நீர்மட்டம் 74 அடியாக  மட்டுமே உள்ள காரணத்தால், நாளை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனால் 56வது ஆண்டாக,  குறிப்பிட்ட தேதியில் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது தள்ளிப்போகிறது.இந்நிலையில் காவிரி டெல்டா விவசாயிகள், 50 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி  பணிகளை துவங்கியுள்ளனர். இம்மாத இறுதிக்குள் தண்ணீர் திறக்கப்பட்டால், கூடுதல் லாபம் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஜூன் 5ம் தேதி முதல் கர்நாடகாவில் பருவமழை துவங்கியுள்ளது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் தமிழகத்திற்கு வர  வாய்ப்புள்ளது. அதன் பின்பே அணை திறக்கப்படும் என தெரிகிறது. விரைவாக அணை திறக்கப்பட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2147 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 2739 கனஅடியாக  இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆனாலும் நீர் திறப்பை விட வரத்து அதிகளவில்  உள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று காலை 74.13 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 74.21 அடியாக அதிகரித்தது.  அணையின் நீர் இருப்பு 36.42 டிஎம்சி.

மேலும் சில
  • குறுவைக்கு இன்று மேட்டூர் திறப்பு இல்லை: டெல்டா விவசாயிகள் கவலை



  • மணலி மண்டலத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்



  • ராகுல்காந்தி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவோம் : ஈவிகேஎஸ்.இளங்கோவன் அறிக்கை



  • நன்மங்கலம் காப்பு காட்டில் குட்டையில் குளித்த மாணவன் மாயம்



  • ஆர்கே. நகர் தொகுதியில் அதிமுக அலுவலகமாக மாறிய அரசு அச்சக ஊழியர்கள் சங்கம்



  • குழந்தை தொழிலாளர் சட்டத் திருத்தத்தை திரும்ப பெறவேண்டும் : தேசிய வீட்டுவேலை தொழிலாளர் இயக்க மாணவிகள் வலியுறுத்தல்



  • புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் டேனிஷ் கோட்டை நுழைவு வாயில்



  • ஆடல், பாடல் சுகமா.... சோகமா...!



  • ரூ. 30 செலுத்தினால் பிளாஸ்டிக் ஆதார் அட்டை



  • 2 பேரை பலி வாங்கிய கதண்டுகள் அழிப்பு



Facebook

Twitter

விஜய் பட வாய்ப்பு மிஸ் செய்த பாவனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]