இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஜி.கே வாசன் வலியுறுத்தல்

6/11/2025 3:20:39 PM
இந்திய தலைவர்கள் பொறுப்பில்லாமல் பேசுகிறார்களாம் : பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப் புலம்பல் பீகார் முதல்வராக விருப்பம் இல்லை : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:கரும்புக்கு போதிய ஆதார விலையை மத்திய அரசு கொடுக்கவில்லை.  இந்நிலையில் இந்த வருடம் 6 ஆயிரம் கோடி  ரூபாய் வட்டியில்லா கடனை மத்திய அரசு வங்கிகள் மூலம் நலிவடைந்த கரும்பு ஆலைகளுக்கு வழங்குவதாக  அறிவித்துள்ளது. ஆனால் கடந்த வருடம் மத்திய அரசு வட்டியில்லா கடனை வங்கிகள் மூலம் நலிவடைந்த கரும்பு ஆலைகளுக்கு ரூபாய் 7 ஆயிரத்து 200  கோடி வழங்கியது. எனவே இந்த வருடம் வழங்குவதாக அறிவித்த தொகை போதுமானதல்ல. கரும்பு ஆலைகளின் வளர்ச்சிக்கும், கரும்பு விவசாயிகளுக்கு  வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகைக்கும் சேர்த்து மத்திய அரசு வழங்கும் இந்த வட்டியில்லா கடன் தொகையின் பயன் கரும்பு விவசாயிகளுக்கு இதுவரை  சென்றடையவில்லை.

அதாவது 2013 -2014ம் ஆண்டில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 600 கோடியும், கடந்த ஆண்டு வழங்கப்பட  வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 600 கோடியும் சேர்த்து இதுவரை ரூ.1,200 கோடி கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டியுள்ளது. கரும்பு விவசாயம்  நலிவடைந்திருப்பதால் கரும்பு விவசாயிகள் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்வதோடு, அவர்களின் தொடர் சாகுபடிக்கு வட்டியில்லா கடன் வழங்கிட  வேண்டும். அப்பொழுதுதான் கரும்பு விவசாயத்தை நம்பியிருக்கும் சுமார் 5 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். கரும்பாலைகளில் உற்பத்தியை பெருக்கவும்,  கரும்பு விவசாயிகளுக்கு உரிய நிலுவைத் தொகை முழுமையாக கிடைத்திடவும், கரும்பு விவசாயம் பெருகவும் மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை வகுத்து  செயல்படுத்தி விவசாயிகள் நலனை காத்திட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • குறுவைக்கு இன்று மேட்டூர் திறப்பு இல்லை: டெல்டா விவசாயிகள் கவலை



  • மணலி மண்டலத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்



  • ராகுல்காந்தி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவோம் : ஈவிகேஎஸ்.இளங்கோவன் அறிக்கை



  • நன்மங்கலம் காப்பு காட்டில் குட்டையில் குளித்த மாணவன் மாயம்



  • ஆர்கே. நகர் தொகுதியில் அதிமுக அலுவலகமாக மாறிய அரசு அச்சக ஊழியர்கள் சங்கம்



  • குழந்தை தொழிலாளர் சட்டத் திருத்தத்தை திரும்ப பெறவேண்டும் : தேசிய வீட்டுவேலை தொழிலாளர் இயக்க மாணவிகள் வலியுறுத்தல்



  • புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் டேனிஷ் கோட்டை நுழைவு வாயில்



  • ஆடல், பாடல் சுகமா.... சோகமா...!



  • ரூ. 30 செலுத்தினால் பிளாஸ்டிக் ஆதார் அட்டை



  • 2 பேரை பலி வாங்கிய கதண்டுகள் அழிப்பு



Facebook

Twitter

விஜய் பட வாய்ப்பு மிஸ் செய்த பாவனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]