இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

கினியா, சியராவில் மீண்டும் எபோலா உலக சுகாதார நிறுவனம் தகவல்

6/11/2025 2:44:43 PM
இந்திய தலைவர்கள் பொறுப்பில்லாமல் பேசுகிறார்களாம் : பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப் புலம்பல் பீகார் முதல்வராக விருப்பம் இல்லை : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

ஜெனீவா: எபோலா நோய் கட்டுக்குள் இருந்த கினியா, சியரா ஆகிய நாடுகளில் மீண்டும் அந்நோய் பரவி வருவது அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியரா, லைபீரியா ஆகிய நாடுகளில் கடந்த 2013ம் ஆண்டு எபோலா நோய் பரவியது கண்டறியப்பட்டது. உலகுக்கே அச்சுறுத்தலாக விளங்கிய இந்நோய்க்கு இதுவரை 11,158 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத எபோலாவால் 27,237 பேர் பாதிப்புக்கு ஆளாகினர்.இந்த நோய் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. எபோலா பாதிப்புள்ள நாடுகளில் வசிப்போர் தாயகம் திரும்பும்போது, அவர்களுக்கு பரிசோதனை செய்தபின்னரே அனுமதிக்கப்பட்டனர். எபோலா பிரிசோதனை நிலையங்கள், தனி சிகிச்சை பிரிவுகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.

நோய் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளான கினியா, சியரா, லைபீரியா ஆகிய நாடுகளில் கடும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. நோய் தாக்கம் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எபோலாவால் இறந்தவர்களை புதைக்க அரசு அனுமதி பெறவேண்டும். தகவல் தெரிவிக்காமல் இறுதி சடங்கு நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.எபோலா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சுகாதார அவசர நிலை பிறபிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் நீண்டகாலமாக மூடப்பட்டன. இதுபோன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பின், இந்த நாடுகளில் எபோலா கட்டுக்குள் வந்தது. எபோலா இல்லாத நிலையை லைபீரியா கடந்த மாதம் அறிவித்தது.

எபோலாவின் தாக்கம் குறைந்ததை அடுத்து, மக்கள் நிம்மதி அடைந்திருந்த நிலையில், கினியா, சியாரா ஆகிய நாடுகளில் மீண்டும் எபோலா பரவி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இருவாரங்களில் கினியாவில் 16 பேருக்கும், சியாராவில் 15 பேருக்கும் எப்போலா அறிகுறி இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.கினியா தலைநகர் கோனாகியில் எபோலா இல்லை என்றிருந்த நிலையில், அங்கு 2 பேர் எபோலாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கிந்தியா பகுதியில் 3 பேருக்கு எபோலா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. கினியா, சியராவில் எபோலா மீண்டும் பரவி வருவது அங்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • டிராகுலாவாக நடித்த கிறிஸ்டோபர் லீ மரணம்



  • தென்கொரியாவில் வேகமாக பரவும் மெர்ஸ் வைரஸ்



  • இந்திய தலைவர்கள் பொறுப்பில்லாமல் பேசுகிறார்களாம் : பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப் புலம்பல்



  • கனமழை காரணமாக நேபாளத்தில் நிலச்சரிவு: 41 பேர் பலி: லேசான நில அதிர்வால் அச்சம்



  • தீவிரவாதத்தை ஒடுக்க ஈராக்கிற்கு கூடுதல் வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா



  • 431 பேரை பலி கொண்ட சீன கப்பல் விபத்து குறித்த விசாரணை தொடங்கியது



  • நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 15 பேர் பலி : வீடுகளுக்கு தீ வைத்து அட்டூழியம்



  • அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்



  • கடந்த 4 ஆண்டுகளில் சிரியா உள்நாட்டு போரில் 2.30 லட்சம் பேர் பலி



  • காதலியுடன் வசித்த போதே மாடல் அழகியுடன் உல்லாசம்



Facebook

Twitter

விஜய் பட வாய்ப்பு மிஸ் செய்த பாவனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]