விழுப்புரம் அருகே விபத்து திரைப்பட இயக்குனர் சரவணன் படுகாயம்
6/9/2025 3:11:28 PM
பெரம்பலூர்: எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் ஆகிய படங்களை இயக்கியவர் டைரக்டர் சரவணன். இவரது நண்பர் கவுதம். இருவரும் இன்று அதிகாலை சென்னையில் இருந்து காரில் திருச்சி புறப்பட்டனர். காரை சரவணன் ஓட்டினார்.இன்று காலை 10.30 மணி அளவில் கார் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் என்ற இடத்தில் வந்தபோது காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் உள்ள பஸ் ஸ்டாப் மீது மோதியது.இதில் டைரக்டர் சரவணன், கவுதம் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வ விரைந்தனர். அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் பெரம்பலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.விபத்து தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.