கவர்ச்சி நடிகை மீது போலீசார் வழக்கு பதிவு
5/16/2015 12:43:04 PM
பாலிவுட்டில் நுழைந்து கவர்ச்சி நடிகைகளை கபளீகரம் செய்துகொண்டிருக்கிறார் சன்னி லியோன். டாப் லெஸ் காட்சி முதல் பெட் ரூம் சீன்வரை துணிச்சலாக நடிக்கிறார். அவரை தங்கள் படத்தில் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று முன்னணி ஹீரோ, ஹீரோயின்கள் தயாரிப்பாளர்களுக்கு கண்டிஷன் போட்டுள்ளனர். இதையறிந்து நொந்துபோயிருக்கிறார் சன்னி. பாலிவுட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். சுதீப் நடிக்கும் கன்னட படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் சன்னி.இதற்கிடையில் மும்பையை சேர்ந்த அஞ்சலி வினோத் பாலன் என்பவர் சன்னி மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார். ‘இணைய தளத்தில் சன்னி லியோனின் நிர்வாண படங்கள் இடம்பெற்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது இளைஞர்களின் மனதை கெடுப்பதாக உள்ளது. நிர்வாண போஸ் தந்திருக்கும் சன்னி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதை ஏற்று சன்னி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விரைவில் சன்னியின் ஆபாச படங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.