இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் மழை தொடரும்

5/16/2015 12:29:26 PM
நாடு முழுவதும் 1000 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி

சென்னை: வளி மண்டல மேல் அடுக்கில் உருவான காற்று சுழற்சி லட்சத்தீவின் மையப்பகுதியில்  நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.லட்சத் தீவுகள் மற்றும் கடற்கரையை ஒட்டிய  பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கடும் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்தது. பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம், திருவள்ளூர் மாவட்டத்தி–்லும் அனேக இடங்களில் நேற்று சில இடங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், இன்று தமிழகத்தின் பல இடங்களில் கன மழை நீடித்தது. குறிப்பாக, தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் கனமழை நீடித்தது. தஞ்சையில், லேசாக சாரல் மழை அடித்தது. பல்லாவரம், தாம்பரம் உட்பட பல இடங்களில் இன்று காலை முதல் சிறு தூரலாக இருந்தது.

 மேலும், சென்னையின் பல இடங்களில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், வளி மண்டல மேல் அடுக்கில் உருவான காற்று சுழற்சி லட்சத்தீவின் மையப் பகுதியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகம் புதுச்சேரியில் இன்றும் அனேக இடங்களில் மழை பெய்யும். சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்யும். கர்நாடகாவிலும் மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் விட்டுவிட்டு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  நேற்று பெய்த மழையில் அதிகபட்சமாக திருமங்கலத்தில் 140 மிமீ பெய்துள்ளது. புதுச்சேரி 80 மிமீ, செய்யார், மேட்டுப்பாளையம், பேரையூர் 70 மிமீ, மன்னார்குடி, தோகைமலை 60 மிமீ, ராமேஸ்வரம், விராலிமலை, உத்ரமேரூர், மரக்காணம், திண்டிவனம் 50 மிமீ, சங்ககிரி, விருதுநகர், குன்னூர், நிலக்கோட்டை, மதுராந்தகம், அரக்கோணம், திருத்தணி 40 மிமீ மழை பெய்துள்ளது.

மேலும் சில
  • டாஸ்மாக் கடை அகற்றாதது ஏன்? புதுகை கலெக்டர் பதில் சொல்ல வேண்டும் : மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி ஆவேசம்



  • ஆயுத போராட்டம் வெல்லும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாவோயிஸ்ட்கள் கோஷத்தால் பரபரப்பு



  • மணப்பெண் மறுத்ததால் திருமணம் நின்றது : உறவுக்கார பெண்ணை மணந்தார் மாப்பிள்ளை : தூத்துக்குடியில் நடந்த பரபரப்பு



  • ஆவடி அருகே பரிதாபம் : ரயில் மோதி ஓட்டல் ஊழியர் பலி



  • பல்வேறு கட்சியில் இருந்து விலகி 200 பேர் புரட்சி பாரதத்தில் சேர்ந்தனர்



  • கூடுவாஞ்சேரியில் ரயில்வே மேம்பால பணி நிறுத்தம்: பொதுமக்கள் அவதி



  • முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும்: மத்திய அரசிடம் கேரளா மனு



  • டெல்டாவில் ஒரு வாரமாக அடை மழை : 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம் : கோடிக்கணக்கில் விவசாயிகளுக்கு நஷ்டம்



  • பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு எதிரொலி : பொருட்கள் விலை உயர்கிறது



  • சென்னை-கோவை இடையே கோடை சிறப்பு ரயில் இயக்கம் : இன்று முன்பதிவு துவங்கியது



Facebook

Twitter

Hotel director onarai hirovakkiya
ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]