இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

சிவகங்கை எஸ்பி அலுவலகம் அருகே மயானத்தில் எரிக்கப்பட்டவர் பெண்?

5/15/2015 2:24:50 PM
நாடு முழுவதும் 1000 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி

சிவகங்கை: சிவகங்கை எஸ்பி அலுவலகம் அருகே மயானத்தில் எரிக்கப்பட்டவர் பெண்ணாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உடலில் உள்ள எலும்புகளை சேகரித்து டாக்டர் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எஸ்.பி அலுவலகம் அருகே நகராட்சி வடக்கு மயானம் உள்ளது. இந்த மயானத்தில் எரியூட்டும் ஊழியராக சுப்பையா (55) வேலை பார்க்கிறார். நேற்று காலை சுப்பையா மயானத்திற்கு சென்றபோது, அங்கு ஒரு உடல் எரிந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். முகம் மற்றும் உடல் முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக இருந்தது, ஒரு கை மட்டும் எரியாமல் இருந்தது.இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, எஸ்ஐ பூமிநாதன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

‘நள்ளிரவில் மயானத்தில், ரகசியமாக அந்த உடல் எரிக்கப்பட்டுள்ளது, அந்த உடலை தான் எரிக்கவில்லை’ என சுப்பையா போலீசாரிடம் தெரிவித்தார். எரிந்து கிடந்த உடல் அருகே ஒரு எலுமிச்சம் பழம் கிடந்தது. அதில் 40க்கும் மேற்பட்ட குண்டூசிகள் குத்தப்பட்டிருந்தன. மேலும், மயானத்தின் 4 திசைகளிலும் நாட்டுக்கோழி முட்டையில் குங்குமம் தடவி வீசி எறியப்பட்டிருந்தது. மயானத்திற்கு 4 சக்கர வாகனம் வந்து சென்ற அடையாளமும் இருந்தது.குங்குமம் தடவிய முட்டை, குண்டூசிகள் குத்திய எலுமிச்சம் பழம் கிடந்ததால், இது நரபலியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அல்லதுஎங்காவது கொலை செய்து, உடலை மயானத்தில் எரித்து விட்டு, நரபலி போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி நடந்ததா எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மயானத்திற்கு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் செந்தில்குமார் தலைமையில் 3 பேர் கொண்ட டாக்டர் குழுவினர் வந்தனர். இவர்கள் எரிக்கப்பட்ட உடலில் இருந்து எலும்புகளை சேகரித்து ஆய்வு செய்தனர். இறந்தவர் பெண்ணாக இருக்கலாம். வயது 30-40க்குள் இருக்கலாம் என கூறப்படுகிறது. எலும்புகளை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்று டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்ய உள்ளனர். சிவகங்கை டவுன் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.எஸ்.பி அலுவலகம் அருகே மர்மமான முறையில் பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட சம்பவம் சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • 3 சிறுமிகளை பலாத்காரம் செய்தவருக்கு 51 ஆண்டு சிறை திருப்பூர் கோர்ட் தீர்ப்பு



  • நகை வியாபாரிகளை தாக்கி ரூ. 72 லட்சம் துணிகர கொள்ளை: 4 ஆயுதபடை போலீசார் கைது



  • பெட்ரோல், டீசல் விலை உயர்வு லாரி உரிமையாளர்கள் கண்டனம்



  • ஆண் குழந்தை பிறந்தால் ரூ. 1000 பெண் குழந்தைக்கு ரூ. 500 லஞ்சம் புதுகை ஜி.ஹெச் முற்றுகை



  • தற்கொலை செய்த வீராங்கனை அரசு வேலையை ஏற்க தாய் மறுப்பு



  • எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை



  • குடந்தை கோயில் தேர் செய்வதில் மோசடி : மரம் உளுத்ததால் பக்தர்கள் வேதனை



  • திருமணமாகி 2 மாதத்தில் காதலனுடன் மனைவி ஓட்டம் : கணவன் போலீசில் புகார்



  • திருமுல்லைவாயலில் ரூ. 5 லட்சம் கேட்டு தொழிலதிபருக்கு மிரட்டல்: வாலிபர் கைது



  • மணலியில் மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்



Facebook

Twitter

Hotel director onarai hirovakkiya
ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]