இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வேலூர் அருகே நள்ளிரவு கோயில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகளை திருட முயற்சி

5/8/2025 3:30:02 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

காவேரிப்பாக்கம்: வேலூர் அருகே நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கோயில் கதவின் பூட்டை உடைத்து திருட முயன்றனர். அப்போது போலீசார் வருவதையறிந்த  அவர்கள்  தப்பியோடி விட்டனர்.வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பகுதியில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அருகே  ரங்கநாதபெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் மிகவும் பிரசித்த பெற்றதாகும். காவேரிப்பாக்கம், வாலாஜா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து  ஏராளமானபக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இக்கோயிலில் கவுதம், ரங்கநாதன் ஆகியோர் பூசாரிகளாக உள்ளனர். நேற்று மாலை வழக்கம்போல் பூஜை  முடிந்து இருவரும் கோயிலை பூட்டி விட்டு சென்றனர். இக்கோயிலில் இரவு காவலாளியாக அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கதுரை  ஆகியோர் உள்ளனர்நேற்று தங்கதுரை வெளியில் சென்றுவிட்டதால் மூர்த்தி மட்டும் இரவு பணியில் இருந்தார்.
 
நள்ளிரவு 12 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர்கள், கேஸ் வெல்டிங் மூலம் கோயிலின் முன்பக்க பூட்டை உடைத்துள்ளனர்.அப்போது அந்தப்பகுதியில் ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விசில் ஊதியபடி சென்றுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள், தங்கள் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து  தப்பியோடிவிட்டனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மூர்த்தி திருடன் திருடன் என கூச்சலிட்டார். போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதற்குள்  மர்ம ஆசாமிகள் தப்பியோடி விட்டனர். கோயிலின் உள்ளே சென்று மூர்த்தி பார்த்தபோது, எதுவும் திருட்டு போகவில்லை என தெரியவந்தது.இதுகுறித்து மூர்த்தி காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி தகவலறிந்த அரக்கோணம் டிஎஸ்பி  கண்ணப்பன், காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் இன்றுகாலை சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும்  கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.நள்ளிரவில் மர்மஆசாமிகள் கோயில் கதவின் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகளை திருட முயன்ற சம்பவம்  இந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • திருப்பூரில் மாவோயிஸ்ட் தலைவன் தங்கிய வீட்டில் 4 சூட்கேஸ்களில் ஆவணம் பறிமுதல்: கும்பலிடம் 2வது நாளாக விசாரணை



  • அம்மிக்கல்லால் அடித்து தாயை கொன்ற மகன் கைது



  • ஈஞ்சம்பாக்கம் அருகே பரபரப்பு : காவலாளிக்கு சரமாரி வெட்டு



  • ராயபுரத்தில் பரபரப்பு : துணிகள் தொங்கவிடும் கம்பியில் இளம்பெண் சடலம் அடித்து கொன்று தொங்கவிடப்பட்டாரா?



  • தாம்பரம் அருகே மனைவிக்கு சரமாரி கத்திக்குத்து : ஆட்டோ டிரைவர் கைது



  • கர்நாடகாவிற்கு மணல் கடத்திய 14 பேர் கைது



  • டிப்பர் லாரி மோதி சிறுவன் பலி : டிரைவர் கைது



  • போலீஸ் மனைவியிடம் செயின் பறிப்பு : ஆர்ஏ.புரத்தில் மர்ம நபர் கைவரிசை



  • கோயில் புதுப்பிக்க பள்ளம் தோண்டியபோது முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள் கண்டெடுப்பு



  • ரயிலில் தூங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு : போலீஸ் தீவிர விசாரணை



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]