அமெரிக்காவில் கடும் சூறாவளி இயல்பு வாழ்க்கை பாதிப்பு
5/8/2025 3:10:27 PM
ஒக்லகாமா: அமெரிக்காவின் ஒக்லகாமா நகரில் நேற்று கடும் சூறாவளி ஏற்பட்டது. இதில் ஒரு பெண் பலியானார். 12 பேர் காயம் அடைந்தனர். சூறாவளியால் வீடுகள் சேதமடைந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.அமெரிக்காவின் ஒக்லகாமா நகர் அருகே நேற்று கடும் சூறாவளி ஏற்பட்டது. கடுமையாக வீசிய காற்றினால் வீடுகள் சேதமடைந்தன. வீட்டினுள் சிக்கி கொண்ட பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 12 பேர் படுகாயம் அடைந்தனர். 80 வயது மூதாட்டி ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சேதமடைந்த பகுதிகளில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.கடும் சூறாவளியால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சூறாவளி, கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.