இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

‘ஆடு மேய்த்தல், வீட்டு வேலை, பூ விற்றனர்’குழந்தை தொழிலாளராக இருந்தவர்கள் பிளஸ் 2 தேர்வில் அபார சாதனை

5/8/2025 3:09:26 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

திருச்சி: ஆடு மேய்த்தல், வீட்டு வேலை, பூ விற்பது என பல்வேறு தொழில்களிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் 15 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அபார சாதனை படைத்துள்ளனர். இதில், மகாலட்சுமி என்ற மாணவி 1,142 மதிப்பெண்களும், விஜய் என்ற மாணவர் 1,012 மதிப்பெண்களும், கஸ்தூரி என்ற  மாணவி 1,006 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். குழந்தை தொழிலாளர்களை மீட்டு உரிய கல்வி வழங்க, தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் (சியர்ஸ்) அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு சிறப்பு பயிற்சி மையங்களில் படிக்க வைத்து முறையான பள்ளிகளில் சேர்க்கப்படுவர். அதன்படி திருச்சி மாவட்டத்தில் நடந்து முடிந்த 2014-15 கல்வியாண்டில் மீட்கப்பட்டதில் 15 குழந்தை தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சி மையங்களில் பயிற்சி வழங்கி, முறையான பள்ளிகளில் பிளஸ் 2 சேர்க்கப்பட்டனர்.

இந்த மாணவர்கள் ஆடு மேய்த்தல், வீட்டு வேலை, பூ விற்பது என பல்வேறு தொழில்களிலிருந்து மீட்கப்பட்டனர்.‘சியர்ஸ்’ மூலம் முறையான பள்ளியில் சேர்ந்த 15 பேரும் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அனைவரும் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மகாலட்சுமி என்ற மாணவி 1,142 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். இவர் வீட்டு வேலை செய்யும்போது மீட்கப்பட்டு செம்பட்டு சிறப்பு பள்ளியில் சேர்த்து, நாமக்கல்  ஸ்ரீவிநாயகா மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.

அதேபோல வீட்டு வேலையிலிருந்து மீட்கப்பட்ட விஜய் என்ற மாணவர் சிறுகாம்பூர் சிறப்புப் பயிற்சி மையத்தில் அனுமதிக்கப்பட்டு, அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதினார். இவர் 1,012 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடம் பிடித்தார். பூ விற்கும் போது மீட்கப்பட்ட கஸ்தூரி என்ற மாணவி செங்குளிப்பட்டி சிறப்பு பயிற்சி மையத்தில் அனுமதித்து, மண்ணச்சநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பயின்று, 1,006 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தார். புனித அன்னாள் பள்ளியில் படித்த பாண்டிமீனா 988,  ஸ்ரீரங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த துர்காதேவி, 974, சேவாசங்கம் பள்ளியில் படித்த செல்வராணி 913 மற்றும் ரேவதி 833 மதிப்பெண்கள் பெற்றனர். சியர்ஸ் திட்ட அலுவலர் பெர்லின் மாணவ, மாணவிகளை பாராட்டினார்.

மேலும் சில
  • இன்ஸ்பெக்டரிடமிருந்து மனைவியை மீட்டுத்தர வேண்டும் : டிஐஜியிடம் விவசாயி முறையீடு



  • மாவட்ட அளவில் காவலாளி மகள் 3-வது இடம்சிஏ படிக்க ஆசை



  • திருவான்மியூர் ஸ்ரீ சங்கரா வித்யாஷ்ரமம் பள்ளி மாணவிகள் உயிர்வேதியியலில் முதல் இரு இடம் பிடித்து சாதனை



  • காஞ்சி மாவட்டத்தில் முதல் 3 இடங்களை சீயோன் பள்ளி பிடித்தது



  • பெரியார் நகர் பள்ளி மாணவி மாவட்டத்தில் 2வது இடம்



  • கலெக்டராவதே என் லட்சியம் 2ம் இடம் பிடித்த மாணவன் பேட்டி



  • மடிப்பாக்கம் பிரின்ஸ் பள்ளி மாணவன் சமஸ்கிருதத்தில் மாநிலத்தில் 3வது இடம்



  • சென்னையில் சமஸ்கிருதத்தில் முதலிடம் பிடித்த மாணவி



  • மண்ணிவாக்கம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழா



  • சமூக விரோதிகளின் கூடாரமாகும் அரும்புலியூர் சமுதாய கூடம் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]