ஆசிரம சுவா் ஏறி குதித்து 3 இளம்பெண்கள் மாயம்
5/8/2025 3:08:33 PM
திருச்சி: திருச்சி ஏா்போர்ட், வினோபா நக ரி ல் அன்னை ஆசிரமம் உள்ளது. இங்கு ஆதரவற்ற மற்றும் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என 120 பெண் குழந்தைகள் தங்கிய படித்து வருகின்றனா். ஆசிரமத்தையொட்டி அதற்கு சொந்தமான பள்ளி உள்ளது.நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் ஆசிரமத்தில் இருந்த பெண்கள் சாப்பிட்ட பின்பு தூங்க சென்றனா். அப்போது ஒரு அறையில் இருந்த 3 இளம்பெண்களை காணவில்லை என சக தோழிகள் நி்ர்வாகத்தினரிடம் கூறினா். இதையடுத்து ஏா்போா்ட் போலீசில் ஆசிரம பொறுப்பாளா் கனிமொழி கொடுத்த புகா ரி ன் பேரில் இன்ஸ்பெக்டா் ரமேஷ், மாயமான 3 இளம்பெண்களை தேடி வருகிறார்.
புகா ரி ல், திருச்சி அடுத்துள்ள கொள்ளிடம் செக்போஸ்ட் பகுதியை சோ்ந்த 10ம் வகுப்பு மாணவி (14), திருவாரூா் வலங்கைமானை சோ்ந்த இளம்பெண் (19), துறையூா் விநாயகா் தெருவை சோ்ந்த இளம்பெண் (17) ஆகிய 3 பேரும் தப்பி சென்றதாக கூறப்பட்டது. விசாரணையில், இரவு ஆசிரமத்தில் இருந்து சுவா் ஏறி குறித்து அடுத்துள்ள ஆசிரம பள்ளிக்கு சென்றுள்ளனா். பின்னா் அங்குள்ள சிறிய கேட் வழியாக 3 பேரும் தப்பி சென்றது தெரியவந்தது. இதில் ஆசிரமத்திற்கு காவலா் உள்ள நிலையில் பள்ளிக்கு காவலா் இல்லை. தொடா்ந்து மாயமான 3 பேரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனா்.