இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஏரியில் மணல் அள்ள எதிர்ப்பு மணல் லாரிகளை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்

5/8/2025 3:01:38 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

கூடுவாஞ்சேரி: சென்னைக்கு அருகே கூடுவாஞ்சேரியை அடுத்த கல்வாய் ஊராட்சியில் பொதுப்பணி துறைக்கு சொந்தமாக 330 ஏக்கர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் காஞ்சி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு மண் அள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில், அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்படுவதாக  மக்கள் புகார் தெரிவித்தனர். இதை கண்டித்தும் மண் அள்ளுவதை தடை செய்யக் கோரியும் கல்வாய் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் திரண்டனர். மண் அள்ள வந்த லாரிகளை சிறைப் பிடித்தனர். ஏரியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி வருவாய் ஆய்வாளர் ரபீக், காயார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முற்றுகையிட்ட அப்பகுதி மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

‘இந்த பெரிய ஏரியில் 3 அடி ஆழத்துக்கு மட்டும்தான் மண் அள்ளுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், இவர்கள் அளவுக்கு அதிகமாக 15 அடிக்கு மேல் மண் அள்ளி வருகின்றனர்.  ஏரியை சுற்றிலும் ஆங்காங்கே மரண பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த ஏரியில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண் அள்ளப்பட்டு வருவதால் மின்கோபுரங்கள் கீழே விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.எனவே, ஏரியில் இருந்து நிரந்தரமாக மண் அள்ளுவதற்கு தடை விதிக்க காஞ்சி மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கூறினர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை  எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் சில
  • சென்னை ஜி.ஹெச். டாக்டர்கள் சாதனை இளம்பெண்ணுக்கு செயற்கை மகாதமனி பொருத்தப்பட்டது



  • கட்டபொம்மன், வீரசக்கதேவி விழா துவங்கியது: பாஞ்சாலங்குறிச்சியில் 3000 போலீஸ் குவிப்பு



  • மு.க.ஸ்டாலின்- இளங்கோவன் திடீர் சந்திப்பால் பரபரப்பு : திமுகவுடன் கூட்டணிக்கு அச்சாரமா?



  • மோனோ ரயில் திட்டம் உள்பட அனைத்து திட்டங்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் நிதி ஒதுக்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஓபிஎஸ் கடிதம்



  • பால் வியாபாரி தற்கொலை வழக்கு விசாரணைக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்த சப்- இன்ஸ்பெக்டர் வாட்ஸ்அப்பில் உரையாடல் ‘ஒலிபரப்பு’



  • மத்திய அரசு கிடுக்கிப்பிடி எதிரொலி: தொண்டு நிறுவனங்களுக்கு கடும் நிதி நெருக்கடி



  • திமுக சட்டத்துறை நிர்வாகிகள் தீர்மானம் கருணாநிதிக்கு 92வது பிறந்த நாள் இனிப்பு வழங்கி கொண்டாட முடிவு



  • ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பெண் சாவு உறவினர் முற்றுகையால் பரபரப்பு



  • பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம்



  • டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]