துறைமுக ஊழியர் வீட்டில் 10 பவுன் திருட்டு
5/8/2025 2:59:04 PM
ஆவடி: ஆவடி, ஸ்ரீராம் நகர் வடக்கு பிரதான சாலையை சேர்ந்தவர் பிரகாஷ் (49). இவர் சென்னை துறைமுக ஊழியர். கடந்த 26-ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு, சொந்த ஊரான வேலூருக்கு குடும்பத்தினருடன் சென்றார். நேற்றிரவு ஆவடியில் உள்ள வீட்டுக்கு பிரகாஷ் வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து புகாரின்பேரில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றார்.