இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

அதிகாரி டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்ட அரசு ஊழியரின் மனைவிக்கு போலீஸ் மிரட்டல்: ஊரக வளர்ச்சி அலுவலர்கள் புகார்

5/8/2025 2:52:49 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

திருவாரூர்: திருவாரூர் அடுத்த அம்மையப்பன் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓவர்சீயராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமையில் செயற் பொறியாளராக பணியாற்றி வரும் செந்தில்குமார் என்பவர் முத்துகிருஷ்ணனை டார்ச்சர் ெசய்து வந்ததாக தெரிகிறது.இதனால் மன உளைச்சலில் இருந்த முத்துகிருஷ்ணன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் நீதிபதியிடமும், கொரடாச்சேரி போலீசாரிடமும் கொடுத்த வாக்குமூலத்தில் செயற் பொறியாளர் செந்தில்குமாரின் டார்ச்சர் காரணமாகவே தீக்குளித்ததாக கூறி இருந்தார். செந்தில்குமாரை கைது செய்யக்கோரி ஓவர்சீயர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் சங்கத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தினர்.

இதையடுத்து முத்துகிருஷ்ணனை தற்கொலைக்கு தூண்டியதாக செந்தில்குமார் மீது கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இன்னும் அவரை கைது செய்யவில்லை.அவரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என ஓவர்சீயர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதற்கிடையில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்ககோரி செந்தில்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட ஐகோர்ட் அதன் மீது வரும் 13ம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில் முத்துகிருஷ்ணனின் மனைவி திலகவதியை கொரடாச்சேரி போலீசார் அடிக்கடி சந்தித்து வருவதாகவும், உடல்நிலை பாதிப்பு காரணமாகவே முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார் என எழுதி தரும்படி கேட்டு மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அவர்கள் கேட்டபடி திலகவதி எழுதி தர மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.  ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் புஷ்பநாதன் கூறுகையில், ‘செயற் பொறியாளர் செந்தில்குமாரின் டார்ச்சர் காரணமாகத்தான் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார் என்பது அவரது வாக்குமூலத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.இந்நிலையில் உடல்நிலை பாதிப்பால் அவர் இறந்ததாக எழுதி தரும்படி கேட்டு அவரது மனைவியை போலீசார் மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. கொரடாச்சேரி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவாரூர் எஸ்பி ஜெயச்சந்திரனிடம் இன்று மனு கொடுக்க உள்ளோம்’ என்றார்.

மேலும் சில
  • திருப்பூரில் மாவோயிஸ்ட் தலைவன் தங்கிய வீட்டில் 4 சூட்கேஸ்களில் ஆவணம் பறிமுதல்: கும்பலிடம் 2வது நாளாக விசாரணை



  • அம்மிக்கல்லால் அடித்து தாயை கொன்ற மகன் கைது



  • ஈஞ்சம்பாக்கம் அருகே பரபரப்பு : காவலாளிக்கு சரமாரி வெட்டு



  • ராயபுரத்தில் பரபரப்பு : துணிகள் தொங்கவிடும் கம்பியில் இளம்பெண் சடலம் அடித்து கொன்று தொங்கவிடப்பட்டாரா?



  • தாம்பரம் அருகே மனைவிக்கு சரமாரி கத்திக்குத்து : ஆட்டோ டிரைவர் கைது



  • கர்நாடகாவிற்கு மணல் கடத்திய 14 பேர் கைது



  • டிப்பர் லாரி மோதி சிறுவன் பலி : டிரைவர் கைது



  • போலீஸ் மனைவியிடம் செயின் பறிப்பு : ஆர்ஏ.புரத்தில் மர்ம நபர் கைவரிசை



  • கோயில் புதுப்பிக்க பள்ளம் தோண்டியபோது முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள் கண்டெடுப்பு



  • ரயிலில் தூங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு : போலீஸ் தீவிர விசாரணை



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]