இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி; வாசிம் அக்ரம் கருத்து
5/6/2025 2:23:40 PM
கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக உள்ள வாசிம்அக்ரம் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம், இந்திய அணி பயிற்சியாளர் ஆகும் வாய்ப்பு பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர், எனக்கு 49 வயதாகிறது. குடும்பத்தை பிரிந்து என்னால் நீண்ட காலம் இருக்க முடியாது, மேலும் பயிற்சியாளர் பொறுப்பு என்பது மன அழுத்தம் ஏற்படுத்தக் கூடியபணி. கொல்கத்தா அணியுடன் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இதுவே போதும் என்றார். பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக வாய்ப்பிருக்கிறதா என்ற மற்றொரு கேள்விக்குபதில் அளித்தஅவர், பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பு வழங்குவது பற்றி கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும். இதுபற்றி அவர்கள் என்னிடம் கேட்கவில்லை, என்றார். இந்திய வீரர் உமேஷ் யாதவ் சிறந்த பவுலராக உருவாகி வருகிறார். கற்றுக் கொள்வதில் ஆர்வம் உள்ள அவர் நிச்சயம் இந்திய அணிக்கு நீண்ட காலம் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.