நாளை பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு : குழப்பம், பயம், மன அழுத்தமா? 104க்கு டயல் பண்ணுங்க
5/6/2025 2:09:06 PM
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்த குழப்பம், பயம், மன அழுத்தம் உள்ளிட்டவைகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகள் குறித்த குழப்பம், பயம், மன அழுத்தம் உள்ளிட்டவற்றுக்கு சுகாதார துறையினர் தொலைபேசி சேவை 104ஐ அழைக்கலாம். தேர்வு முடிவுகள் குறித்த உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கு 25 பேர் கொண்ட குழுவினர் நியமக்கப்பட்டுள்ளனர்.24 மணி நேரமும் மூன்று பிரிவுகளாக இந்த மையம் செயல்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு உளவியல் மருத்துவர், இரண்டு உளவியல் நிபுணர்கள், மருத்துவர், மருத்துவப் பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.
இதுபற்றி 104 சேவை மைய அதிகாரிகள் கூறுகையில்,’’ பொதுவான மருத்துவ சேவைக்காகத்தான் 104 அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மாணவர்களும் பயன்பெறும் வகையில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு சமயங்களிலும் இந்த எண்ணில் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 8 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் வந்தன. அப்போது தேர்வு பயம் பற்றி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ஆலோசனைகள் கேட்டனர்.பிளஸ் 2 தேர்வுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் மாணவர்களின் மன குழப்பம், பயம், மன அழுத்தம் ஆகியவற்றை போக்கவும் சிறப்பு கவுன்சிலிங் வழங்கப்படும். மே மாதம் இறுதி வரை இந்த சிறப்பு ஆலோசனை குழு செயல்படும்’’ என்றனர்.