நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
5/4/2025 2:42:38 PM
சென்னை: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் தலைமை வகித்தார். துணை தலைவர் மணிவண்ணன், பொதுச் செயலாளர்கள் வக்கீல் ரஜினிகாந்த், தேவேந்திரன், அமைப்பாளர்கள் கல்யாண சுந்தரம், தமிழ்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் எல். முருகன், ஜனார்த்தனன், டி. மைக்கல் தாஸ் ஆகியோர் வரவேற்றனர்.
தேசிய ஒருங்கிணைப்பாளர் அசோக் சித்தார்த், மாநில ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்தும், மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத, பொருளாதார கொள்கையை கண்டித்தும் விளக்கி பேசினர். இதில், திருவள்ளூர் மாவட்ட தலைவர்கள் வக்கீல் சந்திரசேகர், திருநின்றவூர் இரா. அன்புசெழியன், விச்சூர் சங்கர், மாவட்ட நிர்வாகிகள் பகுஜன் பிரேம், ரஜினி, அம்பேத் ஆனந்தன், வீரா விஜி, ராக்கெட் ராஜேஷ், நெமிலி குரு, ஜெய்பிம் செல்வம், மயிலை வேலன், அடைக்கலராஜ், குமார், பாலாஜி, மற்றும் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சமரன் நன்றி கூறினார்.