இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மத்திய அரசின் நில சட்டத்தை எதிர்த்து மகாராஷ்டிராவில் 15 கி.மீட்டர் பாதயாத்திரை தொடங்கினார் ராகுல்

4/30/2015 2:13:50 PM
தமிழகத்தில் பினாமி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்: குன்னூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு ராகுல் காந்தி மன நலம் சரியில்லாதவர்: நரேந்திர மோடி கிருஷ்ண பரமாத்மா : பாஜ எம்பி மீண்டும் சர்ச்சை பேச்சு

அமராவதி: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் 15 கிலோ மீட்டர் பாதயாத்திரையை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று தொடங்கினார். பாத யாத்திரை வழியில் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்க இருக்கிறார்.மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். காங்கிரஸ், திரிணாமுல்,இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் பிரமாண்ட பேரணி நடத்தின. விவசாயிகள் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ராகுல் காந்தி பேசினார். நேற்று மீண்டும் ஒரு முறை பேசினார். நேற்று முன் தினம் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டார். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து பல மாநிலங்களில் பாத யாத்திரை நடத்தவும் ராகுல் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.

 இந்நிலையில் முதல் கட்டமாக மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் உள்ள அமராவதி மாவட்டத்தில் இன்று பாதயாத்திரை தொடங்கினார். சுமார் 15 கிலோ மீட்டர் அவர் யாத்திரை செல்ல இருக்கிறார். இதற்காக இன்று காலை மும்பை வந்த அவர் அங்கிருந்து அமராவதி மாவட்டத்தில் உள்ள கன்ஜி கிராமத்துக்கு வந்தார். அவருடன் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வந்திருந்தனர். கன்ஜி கிராமத்திலிருந்து புறப்படும் ராகுல் வழியில் உள்ள தாமன்கான், ரஜனா, தோங்லாபாத் கிராமங்களில் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்க  இருக்கிறார். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார்.பருவம் தவறிய மழை காரணமாக நாடு முழுவதும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியில் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • தீவிரவாதிகளுக்கு தனி சிறை மாநிலங்களுக்கு ராஜ்நாத் சிங் கடிதம்



  • தாய், மகள் பலாத்கார விவகாரம் : குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை : பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்



  • மகளிர் காவல் நிலையங்களில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் : அரியானா பாஜ அரசு உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு



  • ராகுல் காந்தி மன நலம் சரியில்லாதவர்: நரேந்திர மோடி கிருஷ்ண பரமாத்மா : பாஜ எம்பி மீண்டும் சர்ச்சை பேச்சு



  • போலி சான்றிதழ் கொடுத்த ஆம் ஆத்மி அரசின் சட்ட அமைச்சர் தோமரை நீக்க வேண்டும் : டெல்லியில் பாஜ போராட்டம்



  • நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி பயணத்தை விமர்சனம் செய்வதா : அருண் ஜெட்லி



  • பஞ்சாபில் பரிதாபம் பஸ்சில் இருந்து வெளியே வீசப்பட்ட சிறுமி சாவு : சில்மிஷத்தை தடுத்ததால் கும்பல் ஆத்திரம்



  • அரியானா விவசாயிகள் போராளிகள் : பாஜ அமைச்சர் திடீர் பல்டி



  • ராஜஸ்தான் விவசாயி தற்கொலைக்கு ஆம் ஆத்மி கட்சியினரே காரணம் : மத்திய அரசுக்கு டெல்லி போலீஸ் அறிக்கை



  • மத்திய அரசு மேம்படுத்தவுள்ள 100 ஸ்மார்ட் சிட்டிகள்



Facebook

Twitter

ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]