ஜப்தி செய்த 500 பஸ்களை விடுவிக்க ஐகோர்ட் உத்தரவு
4/29/2015 3:56:19 PM
சென்னை: தமிழக போக்குவரத்து கழகம், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அப்பீல் வழக்கில் கூறியிருப்பதாவது:சாலை விபத்துக்களில் பலியானவர்கள், காயம் அடைந்தவர்களது குடும்பத்தினர், போக்குவரத்து துறையினர் மீது வழக்கு தொடர்ந்து நஷ்டஈடு கேட்டார்கள். நஷ்டஈடு கொடுக்க தாமதம் ஏற்பட்டதால் 700 அரசு பஸ்களை ஜப்தி செய்து கோர்ட் பொறுப்பில் உள்ளது. இந்த பஸ்களை அரசிடம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு வழக்கில் கூறியிருந்தது.இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் இன்று விசாரித்து, கோர்ட் பொறுப்பில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட ஜப்தி செய்த பஸ்களை உடனே போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும். நஷ்டஈடு தொகையில் 25 சதவீதத்தை கோர்ட்டில் போக்குவரத்து கழகம் டெபாசிட் செய்ய வேண்டும். ஜூன் 15ம் தேதிக்குள் டெபாசிட் செய்யாவிட்டால் போக்குவரத்து கழக கூடுதல் செயலாளர், போக்குவரத்து கழக மற்றும் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட 5 பேர் ஜூன் 17ம் தேதி அன்று நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.