இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

விவசாயிகளுக்கான வட்டி மானிய திட்டத்தை மாற்றக்கூடாது : பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

4/29/2015 3:55:20 PM
இங்கிலாந்தில் மே 7ல் பொதுத்தேர்தல் பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் வெற்றி பெறுவாரா? சாப்பாடு, குடிநீர் கிடைக்காமல் தத்தளித்தோம் : நேபாள பூகம்பத்தில் தப்பிய தமிழர்கள் உருக்கமான பேட்டி

சென்னை: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எழுதிய கடிதம்:குறுகிய கால பயிர் செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான  வட்டி மானியத்தில் மாற்றங்களை செய்து மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் விவசாயமும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில்  உள்ளனர்.  ஆரம்ப வேளாண் கூட்டுறவு வங்கிகளின் மூலம் கடன் பெறும் விவசாயிகளுக்கு தமிழக அரசு கூடுதலாக 4 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்  என்று பட்ஜெட்டில் அறிவித்தது. இதில் கூடுதலாக 2 சதவீதம் வட்டியிலும், முறையாக திருப்பி வழங்கினால் அதன் மீது 3 சதவீதமும் மானியம் வழங்கப்படும்  என்றும் தெரிவிக்கப்பட்டது.கடந்த 16ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட்டிகளுக்கு வழங்கப்படும் மானியத்தில் மாற்றங்களை மேற்கொள்ள  மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

 நடைமுறையில் உள்ள மானிய வட்டி திட்டம் வருகிற ஜூன் 30 வரை மட்டுமே அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளை  பாதிக்கக் கூடியதாகும்.தமிழகத்தில் கோடையில் பாசனம் செய்வது குறைவுதான். எனவே ஜுன் மாதத்திற்கு பிறகு செய்யப்படும் குறுவை மற்றும் ஆகஸ்டுக்கு  பிறகு செய்யப்படும் சம்பா பயிர்களுக்குத்தான் விவசாயிகளுக்கு கடன் தேவைப்படும். தற்போது இந்த அறிவிப்பால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவர்.எனவே  வட்டிக்கு மானியம் வழங்கும் முறையை மாற்றி அமைப்பது குறித்து பிரதமர் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும். இதுகுறித்து மாநில முதல்வர்களுடன்  ஆலோசித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சில
  • மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரையில் கோலாகலம்



  • தூத்துக்குடியில் தடையை மீறி பேரணி டிஒய்எப்ஐ நிர்வாகிகள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு



  • மன்சூர் அலிகான் வழக்கு பிலிம்சேம்பருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்



  • மே 4ல் இலக்கிய சொற்பொழிவு திமுக இலக்கிய அணி அறிவிப்பு



  • ஓவியர் கோபுலு மறைவு கருணாநிதி இரங்கல்



  • டாஸ்மாக் தலைமை அலுவலகம் குடும்பத்துடன் ஊழியர்கள் முற்றுகை



  • அதிமுக அரசை டிஸ்மிஸ்செய்யக் கோரி காங்கிரஸ் பேரணி மத்திய சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு



  • காலி குடங்களுடன் திமுக கவுன்சிலர்கள் போராட்டம் : ரிப்பன் மாளிகையில் பரபரப்பு



  • மே தினம்: தலைவர்கள் வாழ்த்து



  • தண்டி யாத்திரை 55ம் ஆண்டு நினைவு தினம் உப்பு சத்தியாகிரக யாத்திரை குழு வேதாரண்யத்தில் உப்பு அள்ளியது



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]