லஞ்சம் வாங்கிய விஏஓ சிறையில் அடைப்பு
4/29/2015 3:41:47 PM
வேலூர்: பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டார். ஆம்பூர் தாலுகா, மணியாறுகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சீதாபதி(42), விவசாயி. இவருக்கு அதேப குதியில் பம்பு செட்டுடன் கூடிய விவசாய நிலம் உள்ளது. இதற்கான கூட்டுப்பட்டாவில், தனது பெயரை சேர்க்ககோரி விஏஓ ராஜாவிடம்(33) விண்ணப்பம் அளித்தார். பட்டா தராமல் அவர் தொடர்ந்து அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மீண்டும் விஏஓவிடம் சென்று சீதாபதி கேட்டதற்கு ரூ. 5 ஆயிரம் கொடுத்தால் வேலையை முடித்து தருவதாக கூறியுள்ளார். பின்னர், ரூ. 4 ஆயிரம் தந்தால் பணியை முடித்து தருவதாக விஏஓ ராஜா ஒப்புக்கொண்டார். இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் ராஜா நேற்று காலை புகார் அளித்தார். இதையடுத்து போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை சீதாபதியிடம் கொடுத்தனுப்பினர். இதனை குமாரமங்கலம் சென்று மதியம் 12 மணியளவில் விஏஓவிடம் சீதாபதி கொடுத்தார். மறைந்திருந்த போலீசார், கையும் களவுமாக விஏஓவை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.