இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

உருட்டுகட்டையால் தாக்கி தொழிலாளி கொலை

4/29/2015 3:40:53 PM
சுங்க அலுவலகத்தில் 15 கிலோ தங்கம் மாயம் : உயர் அதிகாரிகள் சிக்குகிறார்கள் ஜூலை 26ல் எழுத்து தேர்வு : குரூப்-2 பதவிக்கு 1,241 காலி பணியிடம்

சென்னை: கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட முதியவர் உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் சிக்கி உள்ளனர்.
சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (52). திருமணமாகாதவர். கூலி தொழிலாளியான இவர் தான் சம்பாதித்த பணத்தை சேமித்து  வைத்திருந்தார். அவரது நண்பர், தி.நகர் சவுத் போக் சாலையை சேர்ந்த செல்வம். இவர் கேன் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார். இந்நிலையில், தனது  தொழிலை விரிவுபடுத்த செல்வம் முடிவு செய்தார்.ஆனால், அவரிடம் போதுமான பணம் இல்லை. இதைத் தொடர்ந்து நண்பரான ஆரோக்கிய தாசிடம் கடந்த சில  மாதங்களுக்கு முன்னர் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார். சில மாதங்கள் வட்டி பணத்தை கொடுத்த செல்வம் அதன் பிறகு அதை கொடுக்கவில்லை. இதனால்,  அவரிடம் ஆரோக்கியதாஸ் கொடுத்த பணத்தையும் வட்டிப்பணத்தையும் கேட்டார். இதில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. ஒருவரிடம் மற்றொருவர் பேசுவதை  தவிர்த்து வந்தனர்.

இந்நிலையில், ஆரோக்கியதாஸ் செல்வத்திடம் சென்று நேற்று காலை மீண்டும் பணம் கேட்டார். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம்  அடைந்த செல்வம் அங்கிருந்த உருட்டுக்கட்டையால் ஆரோக்கியதாஸ் தலையில் ஓங்கி அடித்தார். செல்வத்தின் கூட்டாளியான விஜயகுமாரும் ஆரோக்கியதாசை  சரமாரியாக தாக்கினார். இதில், நிலை குலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் தப்பி ஓடினர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த  அக்கம் பக்கத்தினர் தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ஆரோக்கியதாசை  ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று நள்ளிரவு  சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் செல்வம் மற்றும் விஜயகுமாரை கைது செய்து விசாரித்து  வருகின்றனர்.

மேலும் சில
  • சுங்க அலுவலகத்தில் 15 கிலோ தங்கம் மாயம் : உயர் அதிகாரிகள் சிக்குகிறார்கள்



  • வங்கி அதிகாரிபோல் போனில் பேசி பல கோடி மோசடி : குஜராத் சிறையில் உள்ள முக்கிய குற்றவாளியை சென்னை அழைத்து வர ஏற்பாடு



  • கொடுங்கையூரில் துணிகரம் : ஜன்னல் கம்பி அறுத்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பேரிங் கொள்ளை: கும்பலுக்கு வலை



  • தம்பதியை தாக்கியவரை விசாரணைக்காக அழைத்த எஸ்ஐக்கு சரமாரி அடி உதை: மறியல் செய்தவர்கள் மீது தடியடி: தாம்பரம் அருகே பரபரப்பு



  • அதிகாரிக்கு மிரட்டல் : 2 பேர் கைது



  • பட்டா இடங்களில் கிரானைட் கற்கள் அரசுடமையாக்க கோரி கோர்ட்டில் மனு : விசாரணை ஒத்திவைப்பு



  • கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை



  • காரில் 876 மது பாட்டில்கள் போலீசார் பறிமுதல்



  • 19 நாளில் 23 பைக் திருடிய திருத்தணி வாலிபர் கைது



  • 3 கடை உடைத்து துணிகர கொள்ளை: ஊத்துக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகே கைவரிசை



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]