எல்இடி விளக்குகளை திருடிய மாநகராட்சி மாஜி ஊழியர் கைது
4/29/2015 3:39:36 PM
ஆலந்தூர்: ஆலந்தூரை அடுத்த ஆதம்பாக்கம், நிலமங்கை நகர் பகுதியில் புதிதாக எல்.இ.டி உள்ளிட்ட மின் விளக்குகளை சமீபத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் பொருத்தப்பட்டது.ஆனால், ஆதம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்ட புதிய தெரு மின்விளக்குகள் அடிக்கடி காணாமல் போய் வந்தன. இதுபற்றி சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் நரேஷ்குமார் புகார் தெரிவித்தார். இந்நிலையில், நிலமங்கை நகரில் இருக்கும் அகத்தியர் தெருவில் நேற்றிரவு ஒரு வாலிபர் மின்கம்பத்தில் ஏறி, பல்புகளைக் கழற்றி கொண்டிருந்தார்.தகவல் அறிந்ததும் ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, எல்இடி விளக்குகளை திருடிய அம்பத்தூர், புதூரை சேர்ந்த தனசேகரன் (42) என்பவரை கைது செய்தனர். அவர் அம்பத்தூர் மற்றும் வேளச்சேரியில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் வேலை செய்து, முறைகேட்டில் ஈடுபட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.அவரிடம் இருந்து ₹80 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி விளக்குகள், டைமர்கள் மற்றும் இரும்பு தளவாட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.