இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

டெல்லி பயணம் வெற்றிதான்: விஜயகாந்த் பேட்டி

4/29/2015 3:38:22 PM
சுங்க அலுவலகத்தில் 15 கிலோ தங்கம் மாயம் : உயர் அதிகாரிகள் சிக்குகிறார்கள் ஜூலை 26ல் எழுத்து தேர்வு : குரூப்-2 பதவிக்கு 1,241 காலி பணியிடம்

சென்னை: அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் சென்ற டெல்லி பயணம் வெற்றி தான் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.காவிரி ஆற்றின்  குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும், முல்லை பெரியாறு, தமிழக மீனவர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி  தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடியை நேற்று முன்தினம் சந்தித்து மனு கொடுத்தார்.அதனை தொடர்ந்து நேற்று  நள்ளிரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.  உடன் அவருடைய மனைவி பிரேமலதா, இளைஞரணி செயலாளர் சுதீஷ் ஆகியோர்  வந்தனர்.சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்த் நிருபர்களின் கேள்விக்கு அளித்த பதில்: பிரதமரை சந்தித்தீர்களே உங்களது பயணம் வெற்றியா?ஆம் எங்களது பயணம் வெற்றி தான். தமிழகத்தில் இரு துருவங்களாக செயல்பட்டு கொண்டு இருக்கும் பாஜ, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சி பிரதிநிதிகளையும்  ஒன்றாக இணைத்து   டெல்லிக்கு பிரதமரை சந்திக்க அழைத்து சென்றதே மிகப்பெரிய வெற்றி தான். பிரதமர் எங்களுடைய கோரிக்கைகளை கவனமாக கேட்டார்.  நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

டெல்லிக்கு சென்ற இதே கூட்டணி  வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டால் பெரும் வெற்றி கிடைக்குமா?அது பற்றி நான் இப்போது எதுவும் கூற  முடியாது.உங்களது டெல்லி பயணத்தில் அன்புமணி பங்கேற்காதது குறித்து உங்களுக்கு வருத்தமா?அவர் வராததால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.   எனவே அவர் வராததால்  வருத்தம் இல்லை.ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசு வக்கீல் ஆச்சாரியா தனி நீதிமன்ற நீதிபதி  குன்ஹா அளித்த தீர்ப்பு சரியானது என்று கூறியிருக்கிறாரே? அரசு தரப்பு வக்கீல் ஆச்சார்யாவே தீர்ப்பை வரவேற்று கூறிய பின்பு நான் மேலும் மாற்று கருத்து  தெரிவிக்க என்ன இருக்கிறது.கர்நாடக முதல்வர் சித்தராமையா வரும் 30ம் தேதி பிரதமரை சந்திக்க இருக்கிறாரே?நாம் நம்முடைய மாநில பிரச்னைகளுக்காக  ஒட்டுமொத்தமாக பிரதமரை சந்தித்து மனு கொடுத்து இருக்கிறோம். அதே போல் அவர்களும் அவர்களுடைய மாநில பிரச்னைகளுக்காக செல்கிறார்கள். இவ்வாறு  அவர் பதில் கூறினார்.

மேலும் சில
  • ஜூலை 26ல் எழுத்து தேர்வு : குரூப்-2 பதவிக்கு 1,241 காலி பணியிடம்



  • தொழில்முனைவோர் பயிற்சி திட்டம் : அமெரிக்கா பயணத்திற்கு தமிழக மாணவி தேர்வு



  • சென்னையில் மே தின கொண்டாட்டம் : அனைத்து கட்சிகள் பேரணி, சிந்தாதிரிப்பேட்டையில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு



  • மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரையில் கோலாகலம்



  • தூத்துக்குடியில் தடையை மீறி பேரணி டிஒய்எப்ஐ நிர்வாகிகள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு



  • மன்சூர் அலிகான் வழக்கு பிலிம்சேம்பருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்



  • மே 4ல் இலக்கிய சொற்பொழிவு திமுக இலக்கிய அணி அறிவிப்பு



  • ஓவியர் கோபுலு மறைவு கருணாநிதி இரங்கல்



  • டாஸ்மாக் தலைமை அலுவலகம் குடும்பத்துடன் ஊழியர்கள் முற்றுகை



  • அதிமுக அரசை டிஸ்மிஸ்செய்யக் கோரி காங்கிரஸ் பேரணி மத்திய சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]