இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

நைஜீரியாவில் தீவிரவாதிகள் கடத்திய சிறுமிகள் உட்பட 300 பேர் மீட்பு

4/29/2015 2:46:15 PM
தமிழகம், கேரளா, கர்நாடகா எல்லையில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட்தலைவன் கைது: மனைவி உள்பட 4 பேர் சிக்கினர்பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திலிருந்து இந்தியா உள்பட 34 நாடுகளின் மீட்பு குழுவினர் வெளியேற உத்தரவு

நைஜீரியா: தீவிரவாதிகள் கடத்தி சென்ற சிறுமிகள் உட்பட 300 பேரை நைஜீரியா நாட்டு ராணுவம் அதிரடியாக மீட்டது.நைஜீரியா நாட்டில் போகோ ஹரம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பெண்கள், சிறுமிகளை தீவிரவாதிகள் அவ்வப்பொழுது கடத்தி செல்கின்றனர். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சிபோக் பகுதியில் பள்ளிக்கு சென்ற மாணவிகளை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். சிலர் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்த நிலையில், இன்னும் 219 மாணவிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. ஓராண்டாகியும் அவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தும் மாணவிகளை மீட்க முடியவில்லை. கடத்தி செல்லும் மாணவிகள், பெண்களை தற்கொலை படை தாக்குதலுக்கு தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர். தீவிரவாதிகளின் இந்த செயலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், போகோ ஹரம் தீவிரவாதிகள் மீண்டும் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். சிறுமிகள் மற்றும் பெண்களை தீவிரவாதிகள் கடத்தி சென்று நைஜீரியாவின் வடக்கு சாம்பிசா வனபகுதியில் உள்ள தங்களது முகாம்களின் அடைத்து வைத்திருந்தனர். தகவலறிந்து ராணுவத்தினர் நேற்று அங்கு விரைந்து சென்றனர்.தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். பின்னர், முகாம்களின் அடைத்து வைக்கப்பட்டிருந்த 207 சிறுமிகள், 93 பெண்கள் மீட்கப்பட்டனர். தீவிரவாதிகளின் முகாம்கள் அளிக்கப்பட்டன. மீட்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் சில தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்டவர்கள். ஓராண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் யாரும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திலிருந்து இந்தியா உள்பட 34 நாடுகளின் மீட்பு குழுவினர் வெளியேற உத்தரவு



  • பாகிஸ்தானில் அரசு பள்ளி மீது தீவிரவாதிகள் மீண்டும் தாக்கு: மாணவர்கள் தப்பினர் காவலாளி பலி



  • நியு கினியாவில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி



  • சவுதி அரேபியாவில் இந்தியரை கொன்ற 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்



  • நாகா தீவிரவாதிகள் அட்டூழியம் : துணை ராணுவத்தினர் 8 பேர் சுட்டு கொலை: அசாமில் பரபரப்பு



  • நேபாள நாட்டில் பூகம்பத்தில் உயிரிழந்தோருக்கு அதிபர் ஒபாமா இரங்கல்



  • கருப்பின வாலிபர் கொல்லப்பட்டதால் வன்முறை : அமெரிக்காவின் மேரிலேண்டில் அமைதி திரும்பியது



  • இங்கிலாந்தில் மே 7ல் பொதுத்தேர்தல் பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் வெற்றி பெறுவாரா?



  • உழைக்கும் வர்க்கத்தை போற்றுவோம்: தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்



  • பூகம்பத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் நிவாரண பணிகள் தீவிரம்: 4 நாட்களுக்கு பின்னர் 4 மாத குழந்தை மீட்பு



Facebook

Twitter

சித்தரின் வாழ்க்கை படத்தில் அர்ச்சனா சிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]