இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருவண்ணாமலை அருகே அரசு பஸ் மோதி 5 தொழிலாளர்கள் பலி : சாலையோரத்தில் நின்றிருந்தபோது பரிதாபம்

4/29/2015 2:09:59 PM
இங்கிலாந்தில் மே 7ல் பொதுத்தேர்தல் பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் வெற்றி பெறுவாரா? சாப்பாடு, குடிநீர் கிடைக்காமல் தத்தளித்தோம் : நேபாள பூகம்பத்தில் தப்பிய தமிழர்கள் உருக்கமான பேட்டி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே இன்று காலை சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த கூலி தொழிலாளர்கள் மீது அரசு பஸ் மோதியது. இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம், வெறையூர் அடுத்த தென்மாத்தூர் கிராமத்தை சேர்ந்த 20 கூலி தொழிலாளர்கள் இன்று காலை 5.30 மணியளவில், அங்குள்ள சாலையோர டீக்கடையில் டீ குடித்தனர். பின்னர் கடையையொட்டி உள்ள வெற்றிவேல் முருகன் கோயில் அருகே சாலையோரத்தில் 10 தொழிலாளர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர். மற்றவர்கள் சாலையின் எதிர்புறத்தில் நின்று கொண்டிருந்தனர்.அப்போது மதுரையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக சென்றது. இதனை கண்ட தொழிலாளர்கள் அங்கிருந்து அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் கூலி தொழிலாளிகள் மீது பஸ் மோதியது.

இதில் சீமான்(70), ஏழுமலை(46) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். ராமலிங்கம்(55), அருணாச்சலம்(50), ரங்கன்(40), சுப்பிரமணி(55), முனிசாமி(45), கானுலு(80) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர். அங்கிருந்த ஏழுமலை, மற்றொரு ஏழுமலை ஆகியோர் காயமின்றி தப்பினர்.காயமடைந்தவர்களை, அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை அளித்தும் பலனின்றி ராமலிங்கம், அருணாச்சலம், ரங்கன் ஆகியோர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விபத்து நடந்த தென்மாத்தூரில் வேகத்தடை அமைக்கவும், உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரியும் 100க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

 அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். வேகத்தடை அமைப்பதாக உறுதியளித்ததின்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் டிரைவர் தூக்க கலக்கத்தில் பஸ்சை ஓட்டி வந்துள்ளார்.  கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் மோத இருந்தது. சுதாரித்துக்கொண்ட டிரைவர் பஸ்சை இடதுபுறமாக திருப்பும்போது சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது  மோதியுள்ளது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் உள்பட பயணிகள் யாருக்கும் காயம்  ஏற்படவில்லை. விபத்தில் படுகாயம் அடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், கலெக்டர் ஞானசேகரன், எஸ்.பி. முத்தரசி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் சில
  • மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரையில் கோலாகலம்



  • தூத்துக்குடியில் தடையை மீறி பேரணி டிஒய்எப்ஐ நிர்வாகிகள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு



  • மன்சூர் அலிகான் வழக்கு பிலிம்சேம்பருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்



  • மே 4ல் இலக்கிய சொற்பொழிவு திமுக இலக்கிய அணி அறிவிப்பு



  • ஓவியர் கோபுலு மறைவு கருணாநிதி இரங்கல்



  • டாஸ்மாக் தலைமை அலுவலகம் குடும்பத்துடன் ஊழியர்கள் முற்றுகை



  • அதிமுக அரசை டிஸ்மிஸ்செய்யக் கோரி காங்கிரஸ் பேரணி மத்திய சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு



  • காலி குடங்களுடன் திமுக கவுன்சிலர்கள் போராட்டம் : ரிப்பன் மாளிகையில் பரபரப்பு



  • மே தினம்: தலைவர்கள் வாழ்த்து



  • தண்டி யாத்திரை 55ம் ஆண்டு நினைவு தினம் உப்பு சத்தியாகிரக யாத்திரை குழு வேதாரண்யத்தில் உப்பு அள்ளியது



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]