இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

கருப்பினத்தவர் கொல்லப்பட்டதால் வன்முறை அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்

4/28/2015 2:33:07 PM
சுங்க அலுவலகத்தில் 15 கிலோ தங்கம் மாயம் : உயர் அதிகாரிகள் சிக்குகிறார்கள் ஜூலை 26ல் எழுத்து தேர்வு : குரூப்-2 பதவிக்கு 1,241 காலி பணியிடம்

மேரிலேண்ட்: போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த கருப்பினத்தை சேர்ந்த வாலிபர் இறந்ததால் அமெரிக்காவின் மேரிலேண்டில் வன்முறை வெடித்தது. இதனால் அங்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியை சேர்ந்தவர் ப்ரெட்டி கிரே. வழக்கு ஒன்றில் கடந்த 12ம் தேதியன்று கிரேவை போலீசார் கைது செய்தனர். காவலில் இருந்த கிரேவை போலீசார் தாக்கியதால் அவர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். போலீசார் அடித்து துன்புறுத்தியதால் அவர் இறந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.  இந்நிலையில், கிரேவின் இறுதி சடங்கு நேற்று பால்டிமோர் பகுதியில் நடந்தது. கருப்பினத்தை சேர்ந்தவர்கள் மீது போலீசார் அடிக்கடி தாக்குதலில் ஈடுபவடுவதை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பால்டிமோரில் உள்ள ஒரு மாலில் திடீரென சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். அங்குள்ள பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த வன்முறை மற்ற பகுதிகளுக்கும் பரவியது. ஆங்காங்கே கல்வீச்சு, வாகனங்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் நடந்தன. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் முயன்றும் பயனில்லை. இந்நிலையில், மேரிலேண்ட் கவர்னர் லாரிஹோகன்,அவசர நிலை உத்தரவு பிறப்பித்தார். ஆர்ப்பாட்டகாரர்களின் வன்முறையால் அப்பாவி மக்கள், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார். வன்முறையை ஒடுக்க தேசிய பாதுகாப்பு படையின் உதவியை அவர் கோரினார். இதையடுத்து, மேரிலேண்ட் பகுதிகளில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் மீதான தாக்குதல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என கருப்பினத்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும் சில
  • நேபாள நாட்டில் பூகம்பத்தில் உயிரிழந்தோருக்கு அதிபர் ஒபாமா இரங்கல்



  • கருப்பின வாலிபர் கொல்லப்பட்டதால் வன்முறை : அமெரிக்காவின் மேரிலேண்டில் அமைதி திரும்பியது



  • இங்கிலாந்தில் மே 7ல் பொதுத்தேர்தல் பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் வெற்றி பெறுவாரா?



  • உழைக்கும் வர்க்கத்தை போற்றுவோம்: தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்



  • பூகம்பத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் நிவாரண பணிகள் தீவிரம்: 4 நாட்களுக்கு பின்னர் 4 மாத குழந்தை மீட்பு



  • நைஜீரியாவில் தீவிரவாதிகள் கடத்திய சிறுமிகள் உட்பட 300 பேர் மீட்பு



  • சவுதியில் கட்டிடம் இடிந்ததில் இந்தியர் உள்பட 10 பேர் பலி



  • ஆப்கனில் நிலச்சரிவு 52 பேர் பரிதாப பலி



  • ஏமன் உள்நாட்டு போர் காரணமாக 3 லட்சம் பேர் வீடு இழந்து தவிப்பு: ஐ.நா. தகவல்



  • நேபாள பூகம்பத்தின் பயங்கரம் : 80 லட்சம் பேர் பாதிப்பு : 80 மணி நேரத்திற்கு பிறகு இருவர் உயிருடன் மீட்பு



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]