2024ம் ஆண்டு ஒலிம்பிக் இந்தியாவில் கிடையாது
4/28/2015 2:26:35 PM
புதுடெல்லி: மத்தியில் பொறுப்பேற்றுள்ள பா.ஜ. அரசு இந்தியாவில் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஏலத்தில் பங்கு பெறும் என்று யூகங்கள் நிலவின. இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் நேற்று புதுடெல்லி வந்தார். அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய தாமஸ் பாச், ‘‘2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா ஏலம் கோர உள்ளதா என்று தாம் கேட்டதற்கு, இத்தகைய ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்னர் நாங்கள் அதற்கு நன்கு தயாராகியிருக்க வேண்டும்.மேலும் அதற்கான நிபுணத்துவத்தையும் பெற்றிருக்க வேண்டும். செப்டம்பர் 15ம் தேதிக்குள் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் இடத்தை தேர்வு செய்யும் ஏலத்தில் கலந்து கொள்வது கடினமான காரியம் என்று பிரதமர் கூறியதாக தாமஸ் பாச் தெரிவித்தார். இதன் மூலம் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த மத்திய அரசு முயற்சி செய்யும் என்று எழுந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.