இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நடிகை மீரா மிதுனை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை: எம்கேபி.நகர் போலீசார் மனு

8/24/2021 4:44:26 PM
பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு முக முடக்கு வாத அறுவை சிகிச்சை: 9 ஆண்டாகியும் மீளாத துயரத்தால் மருத்துவமனையில் அனுமதி 2001 இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம்: ஒசாமா பின்லேடனுக்கு தொடர்பில்லை!: தலிபானின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சி

பெரம்பூர்: நடிகை மீராமிதுனை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க  எம்கேபி.நகர்  போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை வியாசர்பாடி எம்கேபி.நகரை சேர்ந்தவர் ஜோ மைக்கேல் பிரவீன். இவர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி எம்கேபி.நகர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரில், ‘’நடிகையும் மாடல் அழகியுமான மீரா மிதுன், பேஸ்புக் மற்றும் இன்ஸ்ராகிராம் ஆகியவற்றில் எனது பெயரையும் புகைப்படத்தையும் தவறாக பயன்படுத்தி தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஜோ மைக்கேல் பிரவீன் வழக்கும் தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ‘’நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று எம்கேபி.நகர் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதன்படி அவதூறு பரப்பியது, சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் நடிகை கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் பட்டியல் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீராமிதுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே மீரா மிதுனை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று எம்கேபி. நகர் போலீசார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் சில
  • புதுச்சேரி சட்டசபையின் முதல் பட்ஜெட் கூட்டம்: கவர்னர் தமிழிசை தமிழில் உரையாற்றினார்



  • அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்ட முன்வடிவு தாக்கல்



  • கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 2021-22ம் ஆண்டில் ரூ11,500 கோடி பயிர்க்கடன்: தமிழக அரசு அறிவிப்பு



  • தங்கம் விலையில் அதிரடி மாற்றம்: சவரனுக்கு ரூ128 குறைந்தது



  • சளி, காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நபர்களின் விவரங்களை தெரிவிக்காத 231 தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை



  • சென்னை மெரினாவில் கலைஞருக்கு நினைவிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



  • விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணை: முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை..!



  • ஒன்றிய அரசின் சட்டத்தால் 16 லட்சம் வாகனங்கள் காயலான் கடைக்கு செல்கின்றன..!



  • தமிழகத்தில் புதிய ‘ஹால்மார்க்’ விதிகளுக்கு எதிர்ப்பு: 35,000 நகைக்கடைகள் ஸ்டிரைக்..! சிறு வணிகர்களுக்கும் கடும் பாதிப்பு என குற்றச்சாட்டு



  • சென்னை உள்பட 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]