இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

5 நாள் சுற்றுப்பயணமாக ஆகஸ்ட் 2ம் தேதி குடியரசு தலைவர் தமிழகம் வருகை: சட்டப்பேரவை வளாகத்தில் மாலை 5 மணிக்கு கலைஞர் படத்தை திறந்து வைக்கிறார்

7/28/2021 5:00:54 PM
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஐந்து நாள் சுற்றுப்பயணமாக ஆகஸ்ட் 2ம் தேதி தமிழகம் வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அன்று மாலை தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்று, பேரவை வளாகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். அவரது வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19ம் தேதி டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். அப்போது, சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு தனித்தன்மையோடு செயல்பட்ட சட்டமன்றம் 12.1.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

அதை நினைவுப்படுத்தக்கூடிய வகையில் சட்டமன்ற நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. அந்த விழாவிற்கு தலைமை தாங்கி விழாவினை நடத்திட வேண்டும். சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவப்படத்தை திறந்து வைக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்தார். அவர் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு வரும் 2ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகிறார். அவர் சுற்றுப்பயணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் 2ம் தேதி தனி விமானம் மூலம் காலை 9.50 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்திற்கு பிற்பகல் 12.55 மணிக்கு வருகிறார். அங்கிருந்து கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். மாலை 4.35 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சட்டமன்ற விழாவில் பங்கேற்க வருகிறார். மாலை 5 மணிக்கு தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார். அப்போது, சட்டப்பேரவை வளாகத்தில் மறைந்த தமிழக முதல்வர் கலைஞரின் உருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றுகிறார்.

இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் உரையாற்றுகின்றனர். விழாவில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்து அன்று இரவு ராஜ்பவனில் தங்குகிறார். ஆகஸ்ட் 3ம் தேதி காலை 10.15 மணிக்கு சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டு சூலூர் விமானப்படை தளத்திற்கு காலை 11.40 மணிக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரிக்கு சென்று, அங்கிருந்து கார் மூலம் ராஜ்பவன் செல்கிறார். அன்று முழுவதும் ராஜ்பவனில் தங்குகிறார்.

மறுநாள் காலை (4ம் தேதி) காலை 10.20 மணிக்கு வெல்லிங்டன் பாதுகாப்பு சேவை ஊழியர்கள் கல்லூரிக்கு சென்று பார்வையிட்டு உரையாடுகிறார். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ராஜ்பவன் திரும்புகிறார். 5ம் தேதி நிகழ்ச்சிகள் ஏதும் இல்லாததால் ராஜ்பவனிலேயே தங்குகிறார். 6ம் தேதி காலை 10.30 மணிக்கு ராஜ்பவனில் இருந்து நீலகிரி வருகிறார். அங்கிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு விமானம் மூலம் 11.25 மணிக்கு சூலூர் விமான படை தளத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு தனிவிமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமை ஆலோசனை நடைபெற்றது. அதன்படி, 5 நாள் பயணமாக வரும் ஜனாதிபதிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகர் முழுவதும் வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஓட்டல்கள், லாட்ஜ்களிலும் சோதனை நடந்து வருகிறது. ரவுடிகள், பழைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல கோவை, ஊட்டியிலும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் சில
  • 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்



  • தென்னிந்திய திருச்சபையின் 75வது ஆண்டு பவள விழா; 100 ஆண்டுகாலம் கம்பீரமாக வெற்றி பயணத்தை தொடர்ந்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி தமிழகத்தில் 500 இடத்தில் மறியல்



  • நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது



  • இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!



  • வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.!



  • ‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம்.! எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி



  • சென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு: 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.! ரூ.9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்



  • அனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • தங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]