இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

உலகளவில் எந்த நாட்டிலும் ஏற்படாத அளவிற்கு இந்தியாவில் 7 நாளில் 22.49 லட்சம் பேர் பாதிப்பு: பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது

4/26/2021 4:55:42 PM
காஞ்சி, திருவள்ளூர், செங்கை மாவட்டத்தில் பரவலாக மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பாலாற்றில் வெள்ள பெருக்கு:.கரையோர மக்களுக்கு எச்சரிக்கை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 5 வாக்குறுதி: 2070-க்குள் ‘பூஜ்ஜியம் கரியமிலவாயு மாசு’ இலக்கு: கிளாஸ்கோ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

புதுடெல்லி: உலகளவில் எந்த நாட்டிலும் ஏற்படாத அளவிற்கு இந்தியாவில் கடந்த 7 நாளில் 22.49 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது.இந்தியாவில் கொரோனா முதல் அலையில் ஏற்படாத பாதிப்புகளை காட்டிலும் தற்போது இரண்டாவது அலையில் உலகளவில் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏராளமானோர் உயிரிழக்கும் சூழலும் இருந்துவருகிறது. நாள் ஒன்றுக்கு 3 லட்சத்துக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த கணக்கெடுப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 991 பேருக்கு புதியதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 73 லட்சத்து 6 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது.

பல்வேறு மருத்துவமனைகளில் 28 லட்சத்து 7 ஆயிரத்து 333 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 561 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 42 லட்சத்து 96 ஆயிரத்து 640 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,812 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 95 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 14.1 கோடி பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். கடந்த வாரம் மட்டும் உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு மிக மோசமான பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.

கடந்த 18ம் தேதி முதல் 25ம் தேதி (நேற்று) வரையிலான ஏழு நாட்களில், 22.49 லட்சம் பேர் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பது தினசரி இறப்பு விகிதத்தில் பிரதிபலித்துள்ளது. கடந்த 18ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உயிரிழப்பு 8,588 ஆக இருந்தது. இதனுடன் ஒப்பிடுகையில், கடந்த ஏழு நாட்களில் 16,257 பேர் இறந்துள்ளனர். அதாவது இறப்பு 89 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்த நோயாளிகளின் அதிகரிப்பு விகிதத்தை விட இது இரு மடங்காகும்.

இந்தாண்டு ஜனவரி 10ம் தேதியுடன் முடிவடைந்த ஏழு நாளில் 17.9 லட்சம் பேர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டனர். அதுவே, அதிகபட்ச ஒருவார பாதிப்பாக இருந்தது. அதே பட்டியலில் ஒரு வார பாதிப்பில் பிரேசிலில் அதிகபட்சமாக 5.4 லட்சம் பேரும், இங்கிலாந்தில் 4.3 லட்சம் பேரும், துருக்கியில் 4.2 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டனர். இவற்றையெல்லாம் தாண்டி ஒரு வார பாதிப்பில் இந்தியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜனவரி 15ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 23,411 உயிரிழப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது. பிரேசிலில் 21,865 பேரும், இந்தியாவில் 16,257 பேரும் இறந்துள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா, கேரளா, டெல்லி, மேற்குவங்கம், ராஜஸ்தான், தமிழ்நாடு, குஜராத், மத்திய பிரதேசம், பீகார், சட்டீஸ்கர், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தினசரி பாதிப்பு 10,000 முதல் 15,000 வரை பதிவாகி வருகிறது. இறப்பு விகிதத்தை பொறுத்தமட்டில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக தினசரி இறப்பு 832 ஆகவும், டெல்லியில் 350 ஆகவும், உத்தர பிரதேசத்தில் 208 ஆகவும், சட்டீஸ்கர், குஜராத், கர்நாடகா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இறப்புக்கள் பதிவாகியுள்ளன.

மேலும் சில
  • காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 5 வாக்குறுதி: 2070-க்குள் ‘பூஜ்ஜியம் கரியமிலவாயு மாசு’ இலக்கு: கிளாஸ்கோ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை



  • அரசு முழு மரியாதையுடன் புனித்ராஜ்குமார் உடல் அடக்கம்: 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்ணீர் அஞ்சலி



  • போதை பார்ட்டி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஷாருக்கான் மகன் ஜாமீனில் விடுதலை



  • டென்னிஸ் வீரர், நடிகைகள் திரிணாமுல்லில் இணைவு; பாஜகவின் கருப்பு கொடிக்கு ‘நமஸ்தே’ கூறிய மம்தா: கோவா கூட்டத்தில் பரபரப்பு



  • மாரடைப்பால் காலமான கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் இன்று மாலை அடக்கம்: லட்சக்கணக்கானோர் கண்ணீர் மல்க அஞ்சலி



  • ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க ரோம் சென்றார் பிரதமர் மோடி: வாடிகனில் போப் ஆண்டவரையும் சந்திக்கிறார்



  • உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • லக்கிம்பூர் வன்முறையை 23 பேர்தான் பார்த்தார்களா?.. உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி



  • 5 மாநில தேர்தல் குறித்து சோனியா ஆலோசனை: மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்பு



  • திரையுலக சாதனைகளை பாராட்டி நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: தனுஷுக்கு தேசிய விருது; துணை ஜனாதிபதி வழங்கினார்.!



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]