இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கஞ்சா சப்ளை செய்த 8 பேர் கைது : 18 கிலோ, கார், பைக் பறிமுதல்

2/24/2021 5:01:35 PM
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

பூந்தமல்லி: மதுரவாயல் அருகே புளியம்பேடு பகுதியில் ஒரு வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நேற்று மாலை அம்பத்தூர் துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், நேற்றிரவு சம்பவ இடத்தில் பூந்தமல்லி உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி, விற்பனை செய்து வருவது தெரியவந்தது.இதுதொடர்பாக, அந்த வீட்டில் கஞ்சா சப்ளையில் ஈடுபட்ட எஸ்ஐ மகன் உள்பட கல்லூரி படிப்பை முடித்த மாணவர்கள் 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களை மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்டவர்களிடம் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் நெற்குன்றத்தை சேர்ந்த சரவணகுமார் (40) என்பவருக்கு சொந்தமாக புளியம்பேடு பகுதியில் உள்ள வீட்டை, கடந்த 2 மாதங்களுக்கு முன் சிதம்பரத்தை சேர்ந்த ஹரி (28) என்ற வாலிபர் வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த வீட்டில் தனது நண்பர்களான சுரேஷ், விக்னேஷ் ஆகியோர் டிராவல்ஸ் நடத்தவும், அவர்களிடம் வேலை செய்யும் 4 பேர்கள் தங்கியிருப்பார்கள் எனக் கூறி, ₹15 ஆயிரம் வாடகை பேசியிருக்கிறார் ஹரி என வீட்டு உரிமையாளர் சரவணகுமார் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, அந்த வீட்டில் வைத்து பிரித்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இக்கும்பல் கஞ்சா சப்ளையில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது. தனிப்படையினரின் சோதனையின்போது, அங்கு கஞ்சா சப்ளைக்கு வாங்கி செல்ல வந்திருந்த தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஜெய்சூர்யா (24), சஞ்சய் (20), மதுரையை சேர்ந்த நாத் (21), சிதம்பரம், கடவாச்சேரியை சேர்ந்த ரஞ்சித்குமார் (18), சென்னை வண்டலூரை சேர்ந்த எலக்ட்ரிஷியன் பிரசாந்த் (19), திருவாரூரை சேர்ந்த சரத்குமார் (27), சென்னை ஆவடி 5-வது பட்டாலியனில் எஸ்ஐயாகப் பணிபுரியும் விஜயலதா என்பவரின் மகனான கல்லூரி மாணவன் அருண் (20), தஞ்சாவூரை சேர்ந்த கல்லூரி மாணவன் சேரன் (22) ஆகிய 8 பேர் எனத் தெரியவந்தது.

அவர்களிடமிருந்து மேலும் ஒரு பைக், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் சிதம்பரத்தை சேர்ந்த ஹரியை சந்திக்க வந்ததாகவும், அவர் தற்போது ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கிவர சென்றிருப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான முக்கிய குற்றவாளியான சிதம்பரத்தை சேர்ந்த ஹரியை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • நாளை மறுநாள் தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை



  • பப்ஜி விளையாட்டில் கோடி கணக்கில் சுருட்டல்: ஆபாசமாக பேசி சிறுமிகள், இளம்பெண்களை வலையில் வீழ்த்திய யூ டியூப்பர் மதன் எங்கே?: பொறிவைத்து தேடும் தனிப்படை



  • குழந்தை வேண்டாம் என வற்புறுத்தியதால் திருமணமான 3 மாதத்தில் கர்ப்பிணி தற்கொலை



  • வேறு ஒருவருடன் நெருக்கமாக இருந்ததால் ஆத்திரம் பெட்ரோல் ஊற்றி கள்ளக்காதலியை எரித்து கொன்று கள்ளக்காதலனும் தீக்குளித்து சாவு: கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை பயங்கரம்



  • திருவாரூர் அருகே இன்று காலை பயங்கரம்: அதிமுக கவுன்சிலர் தலை துண்டித்து கொலை



  • பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை



  • குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?



  • ‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்



  • கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் அதிரடி கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]