இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சோழவரத்தில் சமத்துவ பொங்கல்: மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: மு.க.ஸ்டாலின் பேச்சு

1/13/2021 5:31:58 PM
மாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க 12 பேர் கொண்ட தேசிய பணிக்குழு நியமனம்: உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு: சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு

புழல்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல், தமிழர் பண்பாட்டு விழா, சோழவரம் ஒன்றியம் நத்தம் கிராமத்தில் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் பொங்கல் வைத்தார். நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஜாதி, மதம் இன்றி சமத்துவ பொங்கல் கொண்டாட வேண்டும். சமத்துவம் கல்வியில் கொண்டு வர வேண்டும். இப்போது, நீட் தேர்வு வந்துள்ளது. இதனால் ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவம் படிக்க முடியாமல் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். இதுவரை அனிதா உள்ளிட்ட 16 பேர் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவை ஆதரித்து ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. அது புரியாத புதிராக இருக்கிறது.

4 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. மாற்றத்தை தமிழக மக்கள் விரும்புகின்றனர். நீட் தேர்வை அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும். சமத்துவ பொங்கல், பெரியார் கண்ட கனவு. எல்லா மதத்தினரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற எண்ணம் இருக்க கூடாது என்ற எண்ணத்தில் கலைஞர் முதல்வராக இருந்தபோது, அனைத்து பகுதிகளிலும் சமத்துவபுரம் கொண்டு வந்தார். அதை, இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளது. 1957ம் ஆண்டு திமுக போட்டியிட்டபோது, 15 பேர் வெற்றி பெற்றனர். குளித்தலையில் கலைஞர் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு சென்றதும், கன்னி பேச்சில், ‘விவசாய பிரச்னை குறித்து குரல் எழுப்பினார்.

விவசாயிகளுக்கு மின்சார கட்டணத்தை ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் விவசாய சங்க தலைவர் நாராயணசாமி தலைமையில் போராடிய விவசாயிகள் அனைவரும் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 1989ல் கலைஞர் ஆட்சிக்கு வந்ததும், விவசாயிகளின் கோரிக்கைளை ஏற்று, மின்சார கட்டணத்தை ரத்து செய்தார். 2006ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் பெற்ற விவசாயிகளின் ரூ.7 ஆயிரம் கோடியை உடனடியாக ரத்து செய்தார். இதில் அதிமுகவினரே அதிகமாக பயன் பெற்றனர். கலைஞர், கட்சி பாகுபாடின்றி நிறைவேற்றினார். தை பிறந்தால் வழிபிறக்கும். இது ஆண்டு தோறும் நடக்கிறது. இந்த தை பிறந்ததும் வழி பிறக்கும். நீங்க ரெடியா, நாங்கள் ரெடி. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு: சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு



  • ஆவின் பால் விலை அதிரடி குறைப்பு: புதிய விலை பட்டியல்



  • கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை



  • எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் மோதல்: பின்னால் இருந்து இயக்கும் சசிகலா



  • உளவுத்துறை ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம்: சென்னை போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் நியமனம்..!



  • தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு: வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் மூடல்



  • 4வது முறையாக புதுச்சேரி மாநில முதல்வராக ரங்கசாமி இன்று பதவியேற்பு



  • கொரோனா 2வது அலையால் பீதி; சென்னையில் விமான சேவை குறைந்தது: பயணிகளின் எண்ணிக்கையும் பாதியானது



  • கட்சிக்குள் மோதல் எதிரொலி: அரசியலில் இருந்து விலகி இருக்க கமல்ஹாசன் முடிவு?



  • கவர்னர் மாளிகையில் இன்று எளிமையாக நடந்த விழாவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]