இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சூரப்பா விவகாரத்தில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையில் மோதல்; அமித்ஷாவுடன் அமைச்சர் கே.பி.அன்பழகன் திடீர் சந்திப்பு: ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணையம் தொடர்பாக விளக்கம்

11/22/2020 6:28:32 PM
90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

சென்னை: சூரப்பா விவகாரத்தில் ஆளுநருக்கும் அரசுக்கு இடையில் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் அமித்ஷாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று காலை திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணையம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், திட்டங்களை தொடங்கி வைக்கவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று மதியம் தமிழகம் வந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதன்பிறகு முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் நேற்று மாலை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் அமித்ஷாவை சந்தித்தனர். இதில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று காலை தமிழக ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

அப்போது தமிழக அரசியல் நிலவரம், பாஜகவின் செயல்பாடு, தமிழகத்தில் பாஜவிற்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு குறித்து கேட்டறிந்தார். மேலும் பல்வேறு அரசியல் நிலவரங்கள் குறைத்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதில் உயர்கல்வி தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு இடையில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை ஆணையம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு  உள்ளவர் என்ற காரணத்தால்தான் ஆளுநர் அவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமித்ததாக தொடக்கத்தில் இருந்தே கூறப்பட்டது.

மேலும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக நியமிக்க எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையும் மீறி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக சூரப்பாக நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்டது முதல் அரசுக்கும் அவருக்கும் இடையில் ேமாதல் போக்கு தொடர்ந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவது, அரியர் தேர்வு மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை சூரப்பா எடுத்து வந்தார். மேலும் இது தொடர்பாக வெளிப்படையாகவும் பேசி  வந்தார். இந்நிலையில் சூரப்பா மீதான ரூ. 250 கோடி ஊழல் குற்றச்சாட்டு, பணி நியமனத்தில் முறைகேடு உள்ளிட்டவைகள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசனை நியமித்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து பணியை தொடங்கிய நீதிபதி கலையரசன், சூரப்பா நியமிக்கப்பட்டது முதல் அனைத்து நிகழ்வுகளும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் வந்து கொண்டே இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் சூரப்பா விவகாரத்தில் ஆளுநர் - அரசுக்கு இடையில் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் நேற்று அமித்ஷாவை சந்தித்த முதல்வரிடம் சூரப்பா விவகாரம் குறித்து அமித்ஷா கேட்டதாக கூறப்பட்டது. அப்போது உயர்கல்வித்துறை அமைச்சர் இது தொடர்பாக உரிய விளக்கம் அளிப்பார் என்று முதல்வர் கூறியதாகவும் தகவல் வெளியானது. இதன்படி உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று காலை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதில் சூரப்பா விவகாரம் தொடர்பாக கே.பி.அன்பழகன் அமித்ஷாவிடம் விளக்கம் அளித்தார். சூரப்பா மீதான குற்றச்சாட்டு, அவரின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். மேலும் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதற்கான காரணம் தொடர்பாக விரிவாக விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு 15 நிமிடம் நடைபெற்றது.  அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பாக ஆளுநருக்கும் அரசுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • 90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை



  • ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு



  • முன்கூட்டி விடுதலை செய்யக்கோரி மனு: டிச.7ம் தேதி சசிகலா விடுதலை?



  • விவசாயிகளுக்கு ஆதரவாக டிச. 5ம் தேதி திமுக போராட்டம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு



  • சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 10 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்துவைத்தார்



  • ரயில், பஸ் மீது கல்வீசி தாக்குதல் அன்புமணி மீது நடவடிக்கை?: சென்னை ஐகோர்ட்டில் திடீர் முறையீடு



  • பாம்பனுக்கு 530 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள புரெவி புயல் இன்றிரவு இலங்கையில் கரை கடக்கும்: 100 கிமீ வேகத்தில் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் தகவல்



  • பாமக போராட்டத்திற்கு தடை எதிரொலி: சென்னை ரயில் மீது கல்வீசி தாக்குதல்



  • சூடு பிடிக்கும் தேர்தல் களம்; தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதம்



  • தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்; இன்று காலை பவுன் ரூ400 குறைந்தது: ஒரு வாரத்தில் ரூ1792 சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]