இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 262 பேரில் 4 மாணவர்களுக்கு கொரோனா; 2வது நாளாக இன்றும் கலந்தாய்வு

11/19/2020 5:26:42 PM
90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 262 மாணவர்களில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று 2வது நாளாக கலந்தாய்வு தொடங்கியுள்ளன. இது கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதாக தமிழக அரசு தெரிவித்து வருகிறது. இந்தநிலையில், 2020-21ம் கல்வி ஆண்டில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது. இதில், தமிழகத்தில் 99 ஆயிரத்து 610 பேர் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதில் 57,215 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இந்தநிலையில், கடந்த 16ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது.

அப்போது, அரசு இட ஒதுக்கீடு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு பட்டியல், சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியல்கள் வெளியிடப்பட்டன. இதைத்தொடர்ந்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதில் 270 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 262 மாணவர்கள் கலந்துகொண்டனர். கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் அரங்கத்தில் உள்ளே நுழையும் போதே அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்பிறகு அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டு இடங்களை தேர்வு செய்து அதற்கான ஒதுக்கீட்டு ஆணை பெற்றனர். தொடர்ந்து கலந்தாய்வு முடிந்தபிறகு நேற்று மாலை மாணவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரியவந்தது. இதில், 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஏற்கனவே அந்த 4 பேருக்கும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்கனவே சிடி ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டது. ஆனால், 4 பேருக்குமே அறிகுறி இல்லாத கொரோனா தொற்று என்பதால் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. கொரோனா கண்டறியப்பட்ட 4 மாணவர்களும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதனைத்தொடர்ந்து, இவர்கள் அனைவரும் பிபிஇ கிட் அணிவிக்கப்பட்டு தனி வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்கள் 4 பேரும் நேற்று முதல்வருடன் எடுத்த குழு புகைப்படத்தில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல், இன்று 2ம் நாளாக 365 பேருக்கு மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 268ல் இருந்து 633 வரையிலான ரேங்க் பட்டியலில் உள்ள 365 பேருக்கு இன்று கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேற்று கலந்துகொண்டவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் சமூக இடைவெளி மற்றும் கொரோனா தொற்றை தடுப்பதற்கான கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சில
  • 90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை



  • ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு



  • முன்கூட்டி விடுதலை செய்யக்கோரி மனு: டிச.7ம் தேதி சசிகலா விடுதலை?



  • விவசாயிகளுக்கு ஆதரவாக டிச. 5ம் தேதி திமுக போராட்டம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு



  • சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 10 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்துவைத்தார்



  • ரயில், பஸ் மீது கல்வீசி தாக்குதல் அன்புமணி மீது நடவடிக்கை?: சென்னை ஐகோர்ட்டில் திடீர் முறையீடு



  • பாம்பனுக்கு 530 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள புரெவி புயல் இன்றிரவு இலங்கையில் கரை கடக்கும்: 100 கிமீ வேகத்தில் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் தகவல்



  • பாமக போராட்டத்திற்கு தடை எதிரொலி: சென்னை ரயில் மீது கல்வீசி தாக்குதல்



  • சூடு பிடிக்கும் தேர்தல் களம்; தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதம்



  • தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்; இன்று காலை பவுன் ரூ400 குறைந்தது: ஒரு வாரத்தில் ரூ1792 சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]