இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் 8 மாதங்களுக்கு பிறகு கர்நாடகாவில் கல்லூரிகள் திறப்பு: மாணவர்கள் வருகை சரிவு

11/18/2020 5:20:37 PM
90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

பெங்களூரு: கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் கர்நாடகாவில் நேற்று கல்லூரிகள் திறக்கப்பட்டது. இருப்பினும் தொற்று பயத்தில் பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிக்கு வரவில்லை. குறைந்தளவில் வருகை இருந்தது. கொரோனா வைரசால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. தற்போது, கர்நாடகாவில் தொற்று பரவலின் வேகம் குறைந்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரம் வரை சென்ற நிலையில், தற்போது 2 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. இதனால் 17ம் தேதி முதல் (நேற்று) கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது. அதே நேரத்தில் கல்லூரிக்கு வரும் மாணவர்கள், பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை பெற்று வந்து கல்லூரி நிர்வாகத்திடம் வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 8 மாதங்களுக்கு பிறகு நேற்று கல்லூரிகள் திறக்கப்பட்டது. பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. கொரோனா பயத்தில் பெரும்பாலான மாணவர்கள் வருகை தரவில்லை. வீடுகளில் இருந்தே ஆன்லைனில் கல்வி பயின்று வருகின்றனர். கொரோனா பரிசோதனை செய்து, வைரஸ் தொற்று இல்லை என்ற சான்றுடன் வந்தவர்கள் மட்டுமே கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்களின் வருகை பதிவு வழக்கத்தைவிட குறைவாக இருந்தது. அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர். வகுப்பறைகளில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். ராய்ச்சூர் மாவட்டத்தில் ஒரு வகுப்பில் ஒரு மாணவர் மட்டுமே வந்திருந்தார்.

அவர் ஒருவருக்காக பேராசிரியர் பாடம் கற்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் முதல் நாளில் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது. அடுத்து வரும் நாட்களில் மாணவர்களின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் கல்லூரிகளுக்கு வந்த மாணவர்கள் தங்களின் வகுப்பறைகள் மற்றும் இருக்கையை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கூறுகையில், பெரும்பாலான மாணவர்கள் வீடுகளில் இருந்தே ஆன்லைனில் கல்வி கற்கின்றனர். பலர், கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெறவில்லை. பரிசோதனை செய்த பலருக்கு இன்னும் முடிவுகள் வரவில்லை. அதனால் இனி வரும் நாட்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்’ என்றனர்.

மேலும் சில
  • டெல்லி எல்லைகளில் 7ம் நாளாக தொடர் போராட்டம்; வேளாண் சட்ட ஆட்சேபனைகள் இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு...விவசாய சங்கங்களுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை



  • ஜெகன் - சந்திரபாபு இடையே கடும் வாக்குவாதம்: 15 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: ஆந்திர சட்டப்பேரவையில் பரபரப்பு



  • நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஜன. 27ம் தேதிக்குள் ‘சிசிடிவி’ கேமரா பொருத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • எதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறையை எல்லைக்கு அனுப்புங்கள்..! மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்



  • தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில பேரவை தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிக்க ஏற்பாடு: சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை



  • ‘லவ் - ஜிகாத்’ எதிர்ப்பு சட்டத்தை போன்று மதம், வருமானம், தொழிலை தெரிவித்தால்தான் கல்யாணம்?... அசாமில் வருகிறது புது சட்டம்



  • டெல்லியில் 6ம் நாளாக போராட்டம்; விவசாயிகளுடன் மாலையில் பேச்சுவார்த்தை: 32 குழுக்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு



  • டெல்லியின் 5 நுழைவு வாயில்களிலும் போராட்டம்; ஜே.பி.நட்டா வீட்டில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை: பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட நிலையில் சிக்கல் நீடிப்பு



  • 3வது இறுதிக்கட்ட பரிசோதனை நடக்கும் நிலையில் சென்னையை சேர்ந்த தடுப்பூசி: தன்னார்வலருக்கு திடீர் பாதிப்பு?



  • 4ம் நாளாக விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் பதற்றம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]