‘ஸ்பெஷல் கிளாஸ்’ என அழைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது
9/10/2025 6:29:48 PM
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் 19 வயது பெண். இவர் அரசு கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் திருவண்ணாமலை கூட்டான்தூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(38) என்பவர் உதவிப்பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் மாணவியிடம் கடந்த சில மாதங்களாக தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், நேற்று முன்தினம் சிறப்பு வகுப்பு இருப்பதாக மாணவியை தனியாக கல்லூரிக்கு அழைத்து, வகுப்பறையில் யாருமில்லாதபோது மாணவியிடம் ரமேஷ் பாலியல் தொந்தரவு செய்தாராம்.
அப்போது, அவரிடம் இருந்து தப்பிய மாணவி வீட்டிற்கு சென்று, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து, மாணவி குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து கல்லூரி உதவிப்பேராசிரியர் ரமேஷை நேற்று கைது செய்தனர்.