இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கோடி கணக்கில் வெளிநாட்டு பணம் பதுக்கிய சொப்னா

8/15/2020 2:34:13 PM
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை ஏன்?

திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள சொப்னா கோடி கணக்கான வெளிநாட்டு பணத்தை பதுக்கி வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் கட்டுப்பாட்டில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் அடங்கும். இந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் பணியாற்றும் தூதரக அதிகாரிகளுக்கு செல்வாக்கு இருந்து வந்தது. இதை பயன்படுத்தி சொப்னா பார்சலை அனுப்பி, தங்கத்தை கடத்தி வந்து உள்ளார். அதன்படி கடந்த 2018 முதல் பெங்களூரு, ஐதராபாத் விமான நிலையங்கள் வழியாக ஏராளமான பார்சல்களை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் வாகனங்களில் ஏற்றி கேரளாவுக்கு கொண்டு சென்றுள்ளார். இந்த பார்சல்களில் பெருமளவு தங்கம் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் சுங்க இலாகாவினருக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இவருக்கு அரசியல்வாதிகளுடனும் செல்வாக்கு இருந்துள்ளது. இதை அதிகமாகவே தனக்கு சாதகமாக்கி கொண்டுள்ளார். பெங்களூரு, ஐதராபாத்தில் இருந்து வாகனங்களில் கொண்டு வந்த பார்சல்கள் திருவனந்தபுரம், மலப்புரத்தில் உள்ள சில ரகசிய இடங்களுக்கு கொண்டு சென்றதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சுங்க இலாகா, என்ஐஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. வந்தே பாரத் விமானங்கள் மூலம் ரூ.10 கோடிக்கு மேல் வெளிநாட்டு பணத்தை சொப்னா துபாய்க்கு கடத்தியதும் தெரியவந்துள்ளது.

கொரோனா பிரச்னையால் வெளிநாடுகளில் சிக்கியவர்களை மீட்க, மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். கேரளாவுக்கு வரும் விமானங்கள் திரும்பி செல்லும்போது இங்கு சிக்கிய வெளிநாட்டினரை அழைத்து செல்வது உண்டு. இப்படி செல்பவர்கள் மூலம் சொப்னா ரூ.10 கோடிக்கும் ேமல் வெளிநாட்டு பணத்ைத கடத்தி உள்ளார். சொப்னாவின் வங்கி லாக்கரை பரிசோதித்து பார்த்த போது 8,034 அமெரிக்க டாலர், 711 ஓமன் ரியால் சிக்கின. கோடி கணக்கில் வெளி நாட்டு பணத்தை சொப்னா கடத்துவதாக ஏற்கனவே என்ஐஏ விசாரணையில் தெரியவந்தது. ஆனால் லாக்கரில் குறைந்த அளவே ெவளிநாட்டு பணம் இருந்துள்ளது. ஆகவே கோடிக்கணக்கான பணத்தை எங்காவது பதுக்கி வைத்து இருக்கலாமோ? என்ற சந்தேகம் என்ஐஏ, சுங்க இலாகாவுக்கு எழுந்துள்ளது. இதற்கிடையே தங்கம் கடத்தல் வழக்கில் என்ஐஏ நேற்று மேலும் 4 பேரை ‘உபா’ சட்டத்தில் கைது செய்து உள்ளது. இதையடுத்து வழக்கில் ைகதானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் சில
  • சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை ஏன்?



  • கொரோனா ஊரடங்கு நீடிக்கும் நிலையில் இன்று 5ம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு?... சினிமா தியேட்டர், மண்டபங்கள் திறக்க வாய்ப்பு



  • உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்த நிலையில் நிலம் கையகப்படுத்துதல் வழக்கில் முக்கிய திருப்பம்: புதிய கேள்விகளை எழுப்பி மீண்டும் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்



  • வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு



  • வேளாண் மசோதா நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கூட்டணியில் இருந்து விலகியது சிரோன்மணி; 22 ஆண்டுகால உறவு முறிந்ததாக மாஜி அமைச்சர் அறிவிப்பு



  • உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்



  • போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை தீபிகா படுகோன் ஆஜர்: அடுத்தடுத்து நடிகைகள் சிக்குவதால் பரபரப்பு



  • பாஜக கூட்டணிக்கு வந்த மாஜி முதல்வருக்கு பரிசு மன்ஜிக்கு ‘இசட் பிளஸ்’ பஸ்வானுக்கு ‘இசட்’: பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணியில் சலசலப்பு



  • கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அக். 28, நவ. 3, நவ. 7ல் வாக்குப்பதிவு; நவ. 10ல் ரிசல்ட் 65 தொகுதி இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிப்பு



  • கலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்திடக் கோரி குடியரசு தலைவருக்கு 32 எம்பிக்கள் கடிதம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]